Saturday, November 27, 2010

      ஐயப்பா,போற்றி,போற்றி.
----------------------------------------------
     மோகினிவடிவெடுத்த அரியோடரன் சேர
     அவதரித்த அழகா, போற்றி,
     மகவற்ற பந்தளமன்னன் மகனாய்ப்பிறந்த
    மணிகண்டசாமி,போற்றி.
          [போற்றி,போற்றி,போற்றி,போற்றி.
           ,,                    ,,                   ,,                   ,,       ]

                    தாயவள் நோய்நீக்க புலிப்பாலுக்காக வனம்
                    புறப்பட்ட பாலா போற்றி,
                     எருமைமுக மகிஷியை வனத்தில்வதம் செய்த
                     வீராதி வீரா,போற்றி,
           [போற்றி.................................................போற்றி]

    புலிவாகனனாக பந்தளம் திரும்பிய
    புனித ஐயப்பா,போற்றி,
    அம்பெய்து சபரியில் கோயில்கொண்டருளிய
    சபரிகிரீசா,போற்றி,
              [போற்றி.................................................போற்றி.]

                         பொன்னம்பலமேட்டில் மன்னன்முன் தோன்றிய
                          திவ்யஜோதியே, போற்றி,
                         இந்திரனை அவன்வெல்ல சக்தியாயுதம் தந்த
                         தர்மசாஸ்தாவே,போற்றி.
              [போற்றி.......................................................போற்றி]

    ஞான ஒளியூட்டும் சின்முத்திரைகட்டும்
    தீனதயாளா  ,போற்றி,
    மலையேறி தரிசிக்கவருவோரை ரட்சிக்கும்
    மார்க்கபந்துவே ,போற்றி.
                   [போற்றி...................................................போற்றி]

                             மூவாறுபடிஏறி தரிசிப்பவர் தொழும் '
                             தேவாதிதேவா,போற்றி,
                              கண்கண்டகடவுளே,மணிகண்டசாமியே,
                              கலியுகவரதா,போற்றி,
                   [போற்றி...........................................................போற்றி]
==================================================================

No comments:

Post a Comment