ஐயப்பா,போற்றி,போற்றி.
----------------------------------------------
மோகினிவடிவெடுத்த அரியோடரன் சேர
அவதரித்த அழகா, போற்றி,
மகவற்ற பந்தளமன்னன் மகனாய்ப்பிறந்த
மணிகண்டசாமி,போற்றி.
[போற்றி,போற்றி,போற்றி,போற்றி.
,, ,, ,, ,, ]
தாயவள் நோய்நீக்க புலிப்பாலுக்காக வனம்
புறப்பட்ட பாலா போற்றி,
எருமைமுக மகிஷியை வனத்தில்வதம் செய்த
வீராதி வீரா,போற்றி,
[போற்றி.................................................போற்றி]
புலிவாகனனாக பந்தளம் திரும்பிய
புனித ஐயப்பா,போற்றி,
அம்பெய்து சபரியில் கோயில்கொண்டருளிய
சபரிகிரீசா,போற்றி,
[போற்றி.................................................போற்றி.]
பொன்னம்பலமேட்டில் மன்னன்முன் தோன்றிய
திவ்யஜோதியே, போற்றி,
இந்திரனை அவன்வெல்ல சக்தியாயுதம் தந்த
தர்மசாஸ்தாவே,போற்றி.
[போற்றி.......................................................போற்றி]
ஞான ஒளியூட்டும் சின்முத்திரைகட்டும்
தீனதயாளா ,போற்றி,
மலையேறி தரிசிக்கவருவோரை ரட்சிக்கும்
மார்க்கபந்துவே ,போற்றி.
[போற்றி...................................................போற்றி]
மூவாறுபடிஏறி தரிசிப்பவர் தொழும் '
தேவாதிதேவா,போற்றி,
கண்கண்டகடவுளே,மணிகண்டசாமியே,
கலியுகவரதா,போற்றி,
[போற்றி...........................................................போற்றி]
==================================================================
No comments:
Post a Comment