Sunday, January 29, 2012

கூடிக்கலந்து...............

                                                                       
கூடிக்கலந்து...............
('சிந்துபைரவி ' படத்தில் வரும்  "நானொரு சிந்து "பாட்டின்
மெட்டில்  ஒவ்வொரு வரியும்  கச்சிதமாகப்
பொருந்தும்படி  நான் எழுதிய  கீழுள்ள முருகன் பாட்டை ,
அதே மெட்டில் [சுகாசினி மாதிரி சோகமா  பாடாமல்] 
குகனை நினைத்துக் குஷியாப் பாடிப்பாருங்கள் !)

கூடிக்கலந்து..........................
காவடிச்சிந்து..........................
கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ..கேட்டு
ஆடிவரும் மயிலே !
தந்தையுந்தாயும் கந்தனே ..இந்த
சொந்தம் புதியதில்லே..இது
விந்தைப்புதிருமில்லே!.........................

கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ,..கேட்டு
ஆடிவரும் மயிலே ,
தந்தையுந்தாயும் கந்தனே,..இந்த
சொந்தம் புதியதில்லே,..இது
விந்தைப்புதிருமில்லே..
கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன் மேலே...கேட்டு
ஆடிவரும் மயிலே !.....................................

[ 1 ]மூவிருமுகத்தானுக்கென்னென்ன பேரோ?.........................
நாவாலவன் பேரைச்சொல்லாதார் யாரோ?.............................
மூவிருமுகத்தானுக்கென்னென்ன பேரோ?
நாவாலவன் பேரைச்சொல்லாதார் யாரோ?
சேவல் கொடியோன்பேர் ஜெபித்திருந்தாலே
காவல்தெய்வமாகிக்காத்திடுவானே,
நாமஞ்ஜெபிச்சா ...................நற்கதியுண்டு..................அவன்
நினைப்பிருந்தாலே நிம்மதியுண்டு..நம்புங்கடி.......................

கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ,..கேட்டு
ஆடிவரும் மயிலே .............................................


[2 ]வாயாலவன்நாமம் ஒதிநின்றாலே........................................
நோய்நொடி நீக்கி நலந்தருவானே,.............................................
வாயாலவன்நாமம் ஒதிநின்றாலே
நோய்நொடி நீக்கி நலந்தருவானே;
ஏவல்வினையாவும் எரித்திடுவானே ,
பாவங்கள்யாவும் பொசுக்கிடுவானே,
தலைவனுக்கான ......................ஆறெழுத்தென்ன?....................
தலைவனுக்கான ஆறெழுத்தென்ன?..சொல்லுங்கடி ............

ஓம்......சரவணபவா...................
ஓம்......சரவணபவா...................
ஓம்......சரவணபவா...................

கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ,..கேட்டு
ஆடிவரும் மயிலே ,
தந்தையுந்தாயும் கந்தனே,..இந்த
சொந்தம் புதியதில்லே,..இது
விந்தைப்புதிருமில்லே..
கூடிக்கலந்து காவடிச்சிந்து
பாடு குகன்மேலே ....கேட்டு

ஆடிவரும் மயிலே!................

Sunday, January 8, 2012

மைத்ரீம் பஜத !




       8.1.1994  அன்று மகாசமாதி ஏற்றுக்கொண்ட 
காஞ்சி பரமாச்சார்யார் (நடமாடும் தெய்வம்)
அவர்களின்  நினைவாக, அவர்  உலக ஐக்கியத்துக்காக
எழுதி அருளி எம் .எஸ்  அவர்கள்ஐக்கிய நாட்டு சபையில் பாடிய  ''மைத்ரீம் பஜத''என்ற சம்ஸ்க்ருத பாடலை
என் சிற்றறிவிற்கு எட்டியவரை தமிழாக்கி ,
இன்று (8.1.12) கலா அவர்களின்  குரலில்
பரமாச்சாரியாரின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன்.

              மைத்ரீம் பஜத !

மைத்ரீம்  பஜத ,அகில ஹ்ருஜ் -ஜேத்ரீம்!

அனைத்துளம் வெல்லும் நேயம் வளர்ப்பீர்!

ஆத்மவதேவ  பராநபி  பச்யத !

தமைப்போல் மாற்றார் தமையும் காண்பீர்!

யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!

விடுவீர் போரை,ஆதிக்க வெறியை!

த்யஜத  பரேஷ்வக்ரமம்--ஆக்ரமணம்!

துறப்பீர் பிறரதைப்  பறிக்குந்தீநெறியை!


ஜநநீ  ப்ருதிவீ   காமதுகாஸ்தே ,

விரும்புவதெல்லாம் தருபவள் புவித்தாய்;

ஜனகோதேவ :  ஸகல தயாளு :!

கருணையில் கங்கையாம் எந்தை ஈசன் !

தாம்யத!தத்த !தயத்வம்  ஜனதா:!

மாந்தரே! பொறை,கொடை,பரிவு பயில்வீர்!   

ச்ரேயோ  பூயாத்  ஸகல  ஜநாநாம் !

பாரினில் யாவரும் மேநிலையுறுவீர்!   


[நன்றி :ர.கணபதியின் "மைத்ரீம் பஜத"]
[நன்றி:குமரனின் 'கூடல்'வலையில் உள்ள தமிழுரை ]