Monday, October 31, 2011

தரிசனம் தா,கந்தா!

          தரிசனம் தா,கந்தா!
 [மெட்டு..ஆர்ட் ஆப் லிவிங் பஜன்.."கோபாலா,கோபாலா.".]


 

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

ஆவினன்குடியின் கோவணாண்டியே!வா!
ஏரகத்தின் ஸ்வாமிநாதஸ்வாமியே !வா!
சீரலைவாய் செந்தில்நாதனே!வா!
பரங்குன்றத்து சுரமகள் நாயகா!வா!
பழமுதிர்ச்சோலை வஞ்சி நேசா!வா!
திருத்தணிகைமலை வள்ளீசா!வா!

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

காங்கேயா!கந்தா!கண்மணியே!வா,
ஓங்காரம் விளக்கிய குருகுகா!,வா,
ஓங்கி உலகளந்தவனின் மருகா!வா,
ஏங்கும் எங்களுக்காக இறங்கி நீ வா...இன்னும்
தாங்காதையா,திவ்யதரிசனம் தா!

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

Friday, October 28, 2011

அன்பர்க்கருள்புரிவாய்,கந்தா!

அன்பர்க்கருள்புரிவாய்,கந்தா!

  
பன்னிருகரத்தவா! திருநீறு தரித்தவா!
தென்னகம் வந்தமர்ந்தருள்வோனே!
உன்னடிபற்றியே பணிந்திடும் பக்தரின்
முன்னைவினையறுத்தருள்வாயே !

தடைகள்தகர்த்திடும் கணபதி தம்பியே!
விடைவாகனனின் குருநாதா!
படைவீடாறுடைக்கடவுளே! பக்தர்க்கு
அடைக்கலம் தந்தருள் புரிவாயே!

மத்தமாலை முடிசூடிடும் பித்தனின்
புத்திரமணியே! முத்தையா!
சக்திவேலாயுதா! நித்தமுனைத் தொழும்
பக்தர்க்கு முக்திதந்தருள்வாயே !

மாசில்மதியோடு நதிமுடிசூடிடும்
ஈசனிடமுறை உமையாள் மைந்தா!
நேசமாய் நிதமுமுன் நாமம் நவின்றிடும்
தாசர்க்கு தரிசனம் தருவாயே!

பாரதப்போரினில் பார்த்தனின்தேருக்கு
சாரதியான மாதவன்  மருகா!
ஆறேழுத்துள்ள உன்பேரினை பக்தியாய்க்
கூறுமன்பர்க்கருள்புரிவாயே !

வேட்டுவன்மகளையும் வாசவன்மகளையும்
நாடி மணங்கொண்ட நாயகனே!
ஈடிணையற்ற உன் இணையடிபோற்றியே
பாடுமன்பர்க்கருள்புரிவாயே !
=============================================================

Saturday, October 15, 2011

துணைவன்

                                           

["வேயுறு தோளிபங்கன்" என்று தொடங்கும் 'கோளறுபதிகம்' (சிவத்துதி)போல் முருகனைத் துதிபாட என்மனத்தில் பொங்கிய ஆசையின் விளைவு கீழுள்ள முருகன் துதி ! அதே மெட்டில் பாடிப்பார்க்கலாம்!துணைவனை க்ளிக்கலாம்!]


               துணைவன்


அன்னை அபிராமிபாலன்,தென்பழநிவேலன்,
ஆண்டிபண்டாரக்கோலன்,
தண்டாயுதபாணியாக வெண்ணீறணிந்தென்
இதயம்பதிந்த அதனால் ,
ஒன்பதுகோள்களும் உற்ற நண்பராய் மாறி
துன்பந்தவிர்த்தருளும் ;
இன்னல் என்பதே இல்லை,இன்பமே என்றும்
அண்ணலின் பொன்னடி பணிந்தால் !


 
திருவேரகத்தில் பிரணவ விளக்கமளித்த
பரமகுரு ஸ்வாமிநாதன் ,
குறுநகைசிந்தும் சிறுகுழந்தையாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால்,
வருகின்ற நாட்கள்யாவும் திருநாட்களாகும்;
ஒருநாளும் சிறுமை இல்லை;
பொருள்வளம் பெருகியோங்கும், வறுமையும் நீங்கும்,
குருநாதன் திருவடி பணிந்தால் !


அமரரைக்காக்கப் போரில் அசுரரையழித்து
அ மர்ந்ததிருச்செந்தில்வேலன்
நிமலநீறீந்து நோய்கள் நீக்குந்தெய்வமாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால் ,
ஈசனும் கேசவனும் அயனும் வாசவனும்
அன்போடு ஆசியருள்வர்;
பாசம்வீசும் காலனும் ,காவலனாய் ஆவான்
வேலவனின் விரைகழல் பணிந்தால் !


திருப்பரங்குன்றந்தனிலே மணக்கோலம் பூண்ட
சரவணபவன் சண்முகன்
சுரமகள் தேவயானை மணவாளனாய் என்
இதயம் பதிந்த அதனால்
உமையவள்,கமலை,வாணி உவந்தருள்வர் ஆசி;
நமதுநிழ்ல்போல் துணைவருவர்;
மனம்போல மாங்கல்யமும் ,மணவாழ்வும் அமையும்
குமரேசன் மலர்க்கழல் பணிந்தால் !


கிழவனாய் வள்ளியோடு லீலைகள்செய்த
பழமுதிர்ச்சோலை வேலன்
கஜம் கண்டோடும்வள்ளிக்கு சரணளிப்பவனாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால்
கொடியகாட்டுவிலங்கும் கொட்டுங்கருந்தேளும்
படமெடுத்தாடும்பாம்பும்
வழிவிட்டு விலகியோடும்,இடர்யாவும் நீங்கும்
அழகனின் திருக்கழல் தொழுதால் !


தணிகாசலந்தனிலே குறமகள்தன்னை
மணங்கொண்ட வேல்முருகன்
வள்ளிகைத்தலம்பற்றும் மணவாளனாய் என்
இதயம்பதிந்த அதனால்
மனபலம் கூடும் தேகநலனும் சீராகும்
மனமலம் மாய்ந்தகலும் ;
நினைத்தவை நடந்தேறும்,தனதான்யம் சேரும்
புனிதனின் பொன்னடி பணிந்தால் !



           ஓம் சரவணபவா !

          ஓம் சரவணபவா !

          ஓம் சரவணபவா !

Wednesday, October 5, 2011

கொலுவிருப்பாய் கலைவாணி !


 
                                     


                                  வாகீஸ்வரி ! வீணாபாணி !
                                  கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி ! 

                                  தூயவெண் தாமரை  வாசினியே!
                                  மாசில் வெண்  அன்ன வாகினியே!
                                  படைக்கும் கடவுளின் பத்தினியே!
                                  கலைகள் யாவுக்கும் அதிபதி நீயே!

                                 வாகீஸ்வரி ! வீணாபாணி !

                                 கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !


                                 ஏட்டுச்சுவடியும் அக்ஷரமாலையும்
                                 ஏந்தும் கரமுடைய எங்கள் தாயே !
                                 ஸ்ருங்ககிரி அமர் சாரதையே !
                                 வந்தருள்புரிவாய் பாரதியே!

                                 வாகீஸ்வரி ! வீணாபாணி !

                                 கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !

                                  வெண்ணுடையணிந்து ஒளிர்பவளே!
                                  மெய்ஞானம் தரும் கலைமகளே!
                                  உன்னருட்பார்வை ஒருகணம் பட்டால்
                                  மந்தியும் மேதையாய் மாறிடுமன்றோ?


                                 வாகீஸ்வரி ! வீணாபாணி !

                                 கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !