Thursday, November 25, 2010

     மணிகண்டா,சரணம்.[மெட்டு..ஆர்ட் ஆப் லிவிங் பஜன்..சந்திரசேகராய ...]
========================================================================
      கோடானுகோடி கதிரவர்கள்கூடி
     உதித்தார்ப்போல் ஒளிரும் வதனம்,
     குங்குமப்பூங்கோத்தில்  தும்பை துளிர்த்தார்ப்போல
     புன்முறுவல் தவழும் அதரம் ,
    சின்னவிரல்கள் கூட்டி,சின்முத்திரை காட்டும்
   உந்தன் சுந்தர கரகமலம்,
     [மணிகண்டா சரணம்,தர்மசாஸ்தா சரணம்,
      ஐயப்பசாமி சரணம்]

                  திருமால்மகேசன் திருலீலையாலே
                   அவதரித்த தர்மசாஸ்தா!
                 எருமைமுகத்து மகிஷியைக்கொல்ல
                 வந்துதித்த சபரிவாசா!
                 அரிஹரபுத்ரா,பக்தரின்மித்ரா!
                 செய்தோம் உன் நாமஸ்மரணம்
   [மணிகண்டாசரணம்....................சாமிசரணம்]


        தாயின்நோயைப்போக்க புலிப்பாலுக்காக
         வனம்நோக்கி விரைந்த வீரா!
         மூவுலகும் மாய்க்கவந்த மகிஷிதன்னை
       வதம்செய்து ஒழித்த சூரா!
        மகரஜோதியாய் சங்கராந்திநாளில்
       பொன்னம்பலமேட்டில் மின்னும்
   [மணிகண்டா சரணம், .........சாமிசரணம் .]
-------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment