Saturday, April 30, 2011

லிங்காஷ்டகம்

                                     லிங்காஷ்டகம்    
                                        [ மெட்டு-பிரம்ம முராரி 

                                            
அரி அயன் அனைவரும் பணிந்திடும் லிங்கம்;
திருபுரம் எரித்த தயாபர லிங்கம்;
பிறவிப்பிணி தனை அறுத்திடும்லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

          இஷ்டமாய் தூயர்கள் சேவிக்கும்லிங்கம்;
         பஸ்மமாய் காமனைப்பொசுக்கியலிங்கம்;
        துஷ்டதசமுகனும் வணங்கியலிங்கம்;
         தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

சுகந்தங்கள் சூழ்ந்ததோர் சுந்தரலிங்கம்;
அகத்தின் அழுக்கினை அகற்றிடும்லிங்கம்;
சகலரும் சரணம் அடைந்திடும் லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

          உச்சியில் வளர்மதி சூடியலிங்கம்;
         நச்சுடைநாகம் அணைத்திடும்லிங்கம்;
        தக்ஷயஞம் தடுத்தருளியலிங்கம்;
        தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

குங்குமசந்தனம் பூசியலிங்கம்;
செங்கமலமாலை சூடியலிங்கம்;
முந்தையபாவங்கள் முறித்திடும்லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

            தேவரும் யாவரும் துதித்திடும் லிங்கம்;  
           சேவிக்கும் அன்பர்க்கு சுகந்தரும் லிங்கம்;
           காவியம் கொள்ளா கவின்மிகு லிங்கம்;
          தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

வில்வதளார்ச்சனை  விரும்பிடும் லிங்கம்;
நல்லவை யாவுக்கும் காரண லிங்கம்;
செல்வச்செழிப்பினை சேர்த்திடும் லிங்கம்;
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

        முனிவர்,சுரஅசுரர் பூஜிக்கும்லிங்கம்;
        மணமலர் மாரியில் மறைந்திடும்லிங்கம்;
       மனத்தினில் பக்தியைத்தூண்டிடும் லிங்கம்;
       தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
      தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.
      தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்.

Thursday, April 14, 2011

சித்திரை பூத்தது


         சித்திரை பூத்தது


சித்திரை பூத்ததும் சித்தத்தில் பூத்ததோர்
புத்தம் புதிய சந்தம் ...இனிய
இசை அமைத்தே இதைப்பாடிப்பணிவோம்
இறைவன் பாதாரவிந்தம் ..[மங்களம் பொங்கிடும்
                                                             எங்கெங்கும் தங்கிடும் ]



                    ஸ்கந்தபூர்வஜனாம் தொந்தி கணேசனை
                   வந்தனை செய்திடுவோம் ..அவன்
                   ஐந்துகரத்தாலே  அபயம் அளித்தாசி
                   தந்தருள் புரிந்திடுவான் ..[மங்களம்...]




தனயனிடம் பாடங்கற்ற பரமனின்
வினயத்தைப்பாடிடுவோம் --கையில்
கனலேந்தும் கயிலாயன் குண நலன்கூட்டி  நம்
மனமலம் மாய்த்திடுவான்--(மங்களம்..)





                குகனுக்கு சக்திவேல் தந்த அபிராமி
               மகிமையைப்பாடிடுவோம் --அன்னை
               அகிலாண்டேஸ்வரி  அடியவர்வாழ்வினை
              சுகமயமாக்கிடுவாள் (மங்களம்...)





தோகைமயிலேறி வேகமாய்வரும்
விசாகனைப்பாடிடுவோம் --கருணை
மேகமாய் வந்தருள்மழைபொழிந்தே  அவன்
தேகனலந்தருவான் (மங்களம்..)


      



                   வேலினை ஏந்தும் விசாகனின்மாமனாம்
                   மாலினைப் பாடிடுவோம் --சிறு
                   கால்விரல்கடித்திடும்   ஆலிலைப் பாலகன்
                  காலமெல்லாம் அருள்வான் (மங்களம்)




 முருகன் மாமன் மார்பில் உரையுந்திருமகள்
பெருமையைப் பாடிடுவோம் --அவள்
பொருள்வளம் அளித்து நம் வறுமையைப் போக்கியே
திருவருள் செய்திடுவாள் (மங்களம்--)


                   நான்முகன் நாயகி வீணாபாணியின்
                   மேன்மையை ப்பாடிடுவோம் --கலை
                   வாணி நம் அஞான இருளினைப் போக்கியே
                    ஞான ஒளி   அருள்வாள் (மங்களம்...)


Disclaimer:images are from 'google search'

Tuesday, April 12, 2011

ஸாயிராம் நவமி

        ஸாயிராம் நவமி

          
        ராமநவமிநாளில் சாயிநாமம் ஓதுவோம்;             
        தாமரைப்பதத்தில் பஜனைமலர்கள் தூவுவோம் 


                 கொடிய அரக்கர்கோனை கொன்ற கோதண்டபாணி;
                    கலியுகத்தில் பூண்டநாமம் சீரடிசாயி .                              
                     அரவப்படுக்கை விடுத்து கிழிந்த கந்தல் கோணி ;       
          விரித்து அரி துயின்றதலம் த்வாரகாமாயி.             
                                                                           
[ராமநவமி]

        கல்லாய் உரைந்த அகல்யாவை மீட்டவர் ரகுராம்;
                       செங்கல்லில் தன் உயிரை அடக்கி வைத்தவர் சாயிராம்.
       சபரி ருசித்த பழத்தை உண்டு ரசித்தவர் ரகுராம் ;
                       பாயாஜாபாய் அளித்த  உணவைப் புசித்தவர் ஸாயிராம்.          
[ராமநவமி]



                       அயோத்தி வருமுன் பதினான்காண்டு ராமரின்வனவாசம்;
                       சீரடிதிரும்புமுன் நான்காண்டு சாயியின் அக்ஞாத வாசம்.
   வெற்றிகரமாய் முடித்தார் ராமர் அச்வமேதயாகம்; 
           மீட்டுத்தந்தார் ஸாயிநாதர்  சந்த்படீலின் அச்வம்.
                                                       [ராமநவமி...]
                                                           
                              

        வில்வித்தை பயின்று தேர்ச்சி பெற்றவர் ரகுராம்;
        மல்யுத்தக்கலையில் பயிற்சி பெற்றவர் சாயிராம்.
       அம்பினாலே அரக்கர்கோனை அழித்தவர் ரகுராம்;
           அன்பால் ரோஹிலாவையடக்கியவர் ஸாயிராம்.
[ராமநவமி]
                          

                     இனம்,மதம், மொழி பேதமற்ற சாயி மனிதமேரு;                 
                     துனியிலிருந்து அவரளித்த உதியோ புனிதநீறு;                     
                     கண்கண்டகடவுள் சாயி நமது கல்பத்தரு ;                           
                     மீண்டும்மீண்டும் படித்து உய்வோம் சாயிவரலாறு.            [ராமநவமி-]

              பிக்ஷை வாங்கி பகிர்ந்துண்டவர்  நாமம் சாயிராம்      
       ரக்ஷையாக நம்மைக்காக்கும் நாமம் சாயிராம்       
      அக்ஷயபாத்திரமாய் அருளும் நாமம் சாயிராம்      
        மோக்ஷமளிக்கும்  மூலமந்த்ரம்  ஒம்ஸ்ரீசாயிராம்       
                                                                              ஒம்ஸ்ரீசாயிராம்         
                                                                                                ஒம்ஸ்ரீசாயிராம்    



disclaimer:images are from 'google search'                        

Saturday, April 9, 2011

கருணைக்கோர் எல்லையுண்டோ?

                                


கருணைக்கோர் எல்லையுண்டோ? குருகுகனின்
கருணைக்கோர் எல்லையுண்டோ?



                                                                                                                                                                                                          

                    எந்தனது சிந்தையிலே சொந்தம்போல வந்தமர்ந்து   
                    சுந்தரத்தமிழிலிந்த சந்தந்தனைத் தந்தகந்தன்,
                   முந்திவந்ததொந்தன் ஏகதந்தனுக்குடன் பிறந்தான்
                   தந்தைக்குபதேசம் செய்த மைந்தன்,சக்திநந்தனனின்..   
                                                                                               [கருணைக்கோர்...]



                          மாங்கனிகிட்டாதது போலேயொரு லீலைசெய்து ,      
                        ஓங்குபழநிமலை வந்தமர்ந்த வேலாயுதன்;
                        பாங்காக ஏரகத்தில் ஓங்காரம் விளக்கிய
                        காங்கேயன்,சீரலைவாய் செங்கல்வராயனின் [கருணைக்கோர்..]


         
         
          அரிமகள் அம்ருதவல்லியாய்த்தவமிருந்து
          சுரமகளாய்ப்பிறந்த தேவயானி துணைவன் ,
          மால்மகள் சுந்தரவல்லியாய்த்தவமிருந்து
          மான்மகளாய்ப்பிறந்த குறவள்ளியின் கணவன் [கருணைக்கோர்..]




                      சமயத்தைச்சீராக்க சங்கரராய் அவதரித்த
                      உமாமகேசனுக்கு வழிகாட்டி உதவிட,
                      குமரிலபட்டராய் அவனியிலவதரித்து,
                      உமிக்காந்தலிலே தவம்புரிந்தபுனிதனின் [கருணைக்கோர்..]


      
                        ஆளுடைய பிள்ளையாய் அம்பிகையின் பாலருந்தி                  
                     ``தோடுடைய செவியன்'' என்று    தொடங்கிப்பல
                       தேவாரப்பாடல்களைத் தேன்மழையாய்ப்பொழிந்த
                       சேவல்கொடியோனவன் ,சரவணபவன் ,முருகன்          
                                                                                               [கருணைக்கோர்..]     



                                                                                                                          

                  வானவரும் தானவரும் வணங்கிடும் சேனானி ,
                 தீனர்களைக்காக்கும் தண்டாயுதபாணி ,
                 மீனாளும் மகேசனும் போற்றிடும் புத்ரமணி ,
                 தேனாய் இனிக்குமவன் திருநாமம் சுப்ரமணி.[கருணைக்கோர்]


disclaimer:  images have been taken from'google search'