Wednesday, October 31, 2012

ஆறெழுத்தோது!



               ஆறெழுத்தோது !

இணையுன் மனத்தை குகனின்  பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!

நாதம்பிறந்ததவன் பொருள்சொன்ன பிரணவத்தில் !
கீதம்பிறந்ததவன் கிண்கிணிக்கழலொலியில்!
வேதங்கள்வாழ்த்திடும் வண்ணமயிலோனவன்
பாதங்களே படகாம் பிறவிக்கடல்தாண்ட!

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!

பாயும்புலியுமோர் பூனைபோல் பதுங்கிடும்,
நோய்களும்பேய்களும் அண்டாமல் ஒதுங்கிடும்,
தீயுந்தணிந்து இளந்தென்றலாய்த்தழுவிடும்,
ஓயாதவன்நாமம் ஓதியே  வழிபட்டால்!

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!


 
நடந்தாலவன் கோயில் நோக்கிமட்டும் நட!
படுத்தாலவன்பாதம் பணியமட்டும் படு !
அறிவிலியே! வாய்திறந்தால் கடைதேற்றும்
ஆறெழுத்தையோத மட்டும் அசை உன் நா !

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!


 
முகங்கள் மூவிரண்டுமுன் அகத்தினில் நிலைத்திடில்
நிகழ்பவையாவும் சுபமே!-இடர்நீக்கும்
விகடச்சக்கரன்தம்பி விரைகழல்பற்றியே
புகலடைந்தோர் வாழ்வில் பொங்கிடும்மங்களமே !

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!

 

Monday, October 22, 2012

வாணியை வேண்டுதல்



வாணியை வேண்டுதல் 
(பாரதியாரின்  பாஞ்சாலி சபதத்திலிருந்து  கிடைத்த 
 சரஸ்வதி  துதி )

தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர 

            மொழிந்திடுதல்;சிந்திப்பார்க்கே 

களிவளர உள்ளத்தில் ஆனந்தக்கனவு பல 

              காட்டல் ,கண்ணீர்த் 

துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம்

               நீ அருளும் தொழில்களன்றோ ?

ஒளிவளருந்தமிழ்வாணீ !அடியநேற் 

                 கிவையனைத்தும்  உதவுவாயே.
 

Thursday, October 18, 2012



நவராத்திரி துதி பாடுவோம்

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

பங்கயக்கரங்களில் பூங்கணை ஐந்தும் ,
செங்கரும்பும் பாசாங்குசமும் தாங்கி
அன்பால் நம்மை ஆண்டருள் புரியும்
அம்பிகையவளின் ஒன்பது இரவும்
கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

முதல் மூன்றிரவினில் துர்க்கையாகி
தீயசக்திகளை மாய்த்து ஒழிக்க
நெஞ்சுறமும் உடல்பலமும் அருளும்
கருணாசாகரி,பரமேஸ்வரியை

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

இடை மூன்றிரவினில் திருமகளாகி
குறைவற்றதனமும் நிறைந்தமனமும்
இல்லார்க்கீயும் வள்ளல்குணமும்
நமக்கருளும் இமகிரிமகளவளை
கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

கடை மூன்றிரவினில் கலைமகளாகி
அஞானமகற்றி மெய்ஞானமூட்டி
ஆயகலைகள் அறுபத்துநான்கும்
அருளும் தாய் அபிராமவல்லியை

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

மங்கலந்தரும் சங்கரன் மங்கையவள்;
சஞ்சலந்தீர்க்கும் ரங்கனின் தங்கையவள்;
என்றும் வற்றா கருணைக் கங்கையவள்;
நம் நலங்காக்கும் நவராத்திரி நங்கையவள்.

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;