Saturday, November 20, 2010

வேலா!நீ வா! [மெட்டு...ஆர்ட் ஆப் லிவிங் பஜன்  ..போலே கிஜெய் ஜெய் ,ஷிவ்ஜீகி ஜெயஜெய் ]
=======================================================================================================
 கோலமயிலோனே,வேலா,நீவா,வா!
  காத்யாயினியின் ப்ரியபாலா,நீ வா வா!
 தேவசேனாபதியே,வேலா நீ வாவா !
  பாவைவள்ளி மணவாளா,நீவாவா!

             கிணுகிணுவென கழல் இசைபாட,
             சிலுசிலுவென  மயில் நடமாட,
             தகதகவென மின்னும்வேலேந்தி
              முருகன்வந்தான் ,மால்மருகன் வந்தான்.
           [கந்தன்வந்தான்,உமானந்தன் வந்தான் ,
            ,,                   ,,           சிவமைந்தன் வந்தான் .]


 தொப்பைக் கணபதி தம்பியே,நீவாவா,
  அப்பனுக்குப் பாடஞ்சொன்ன சுப்பா நீவாவா ,
சூரசம்ஹாரம் செய்த ஷண்முகா,வா வா,
 தீராவினை தீர்க்கும் ஆறுமுகா,வாவா! 

                         ``சரவணபவா!'என நாம்பாட,
                          ``ஆரோஹரா"எனயாவரும் கூவ,
                              அன்னையளித்த சக்திவேலேந்தி
                              பன்னிருகண்ணனாம் கந்தன் வந்தான்.
                           [கந்தன்வந்தான் ...............சிவமைந்தன்வந்தான் ]
============================================================

No comments:

Post a Comment