Monday, February 25, 2013

அழகா !வா!


அழகா !வா!
(SUBBUSIR sings:
http://www.youtube.com/watch?v=ZLZJ9NlBN9Q&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1

கயிலாய நாதருக்கு  
உயிரொலியை விளக்கியவா !
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண 
மயிலேறி  முருகா !வா!வா !

மங்களச் செவ்வாய்க்கோள் கவ்விய வெண்திங்களென 
குங்குமச்செந்நிற முகத்தில் வெண்ணீற்று நுதல் ஒளிர 
சிங்கார வேலா நீவா !-சிவ
சங்கரியின் செல்வா நீவா!
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

தன்னினமென்றே மயங்கி விண்மீன்கள் அண்மைவர
மின்னும் பன்னிரு விழிகள் தண்ணருளைத்தான் பொழிய
கங்காதரன் மகனே !வா!-சூர 
சங்காரம் செய்தவனே!வா!
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

தையல் தேவகுஞ்சரியும் ஒயிலாய் ஒருபுறமிருக்க,
மையலிலே மான்மகளும் மயங்கி மறுபுறமிருக்க,
ஒய்யார நடைபோட்டு வா !இந்த 
வையமெல்லாம் உய்ய நீ வா!
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

கயிலாய நாதருக்கு
உயிரொலியை விளக்கியவா !
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !