Friday, November 5, 2010

  கண்ணா வா [மெட்டு..மலர்ந்தும் மலராத பாதிமலர்போலே ....]
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடர்ந்த இருள்சூழ்ந்த சிறையில் தேவகிக்குப்
 பிறந்த முகில்வண்ணனே ..மாமன்
 வருமுன் சிறைவிடுத்து தந்தைதோள்அமர்ந்து
விரைந்த மாயக்கண்ணனே

            நதியும்வழி கொடுக்க நாகம் குடைபிடிக்க
            சென்ற ஜகன்னாதனே ..நந்த
            கோபகுமரனாக யசோதாநந்தனாக
            வளர்ந்த நவநீதனே
   [ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ ..கண்ணே
   ''        ''        ''        ''       ''       ''       '''        ''''             '                 ''''''     '''''            ]

         மண்ணை உண்ட உன்னை வாய்திறந்துகாட்ட
         சொன்ன அன்னைமுன்னே ..யசோதைஅன்னைமுன்னே
        சின்னஞ்சிறியவாய் திறந்து அண்டசராசரங்கள்
         காட்டி அசரவைத்தாய் ..தாயைத்திகைக்கவைத்தாய்

                 விஷமம்தாங்காமல் கயிற்றால்தாயுன்னை
                 உரலில்கட்டிவைத்தால் ...அந்த
                 உரலை இழுத்தவண்ணம் தவழ்ந்து `தாமோதரன்'
                 என்றேபேர் எடுத்தாய் ..தாமோதரன்என்றேபேர்எடுத்தாய்
                                                              [ஆரிராராரோ...]
      
          கோபிகன்னியர்கள் சுமந்த நீர்க்குடத்தை
         கல்லாலடித்து உடைத்தாய் ..அவர்
          காணுமுன்னர்மறைந்தோடி ஒளிந்துநின்று
         குறுமபுசெய்து சிரித்தாய் ..குறுமபுசெய்துசிரித்தாய்

                      தோழர்தோளேறி தாழி உடைத்து வெண்ணை
                      திருடியுண்டு களித்தாய்..தட்டிக்
                       கேட்டதாய்முன்னே ஏதும்அறியாத
                     பிள்ளைபோல நடித்தாய் ..நல்ல
                        ''    ''       ''        ''       ''       ''     ''     ''[ஆரிராராரோ...]

          பஞ்சைமிஞ்சும்உந்தன் பிஞ்சுவிறல்பதிய
         தவழ்ந்துவருவாயடா..எங்கள்
          இல்லம்வருவாயடா ..வண்ண
         மயிலிறகுசூடி குழலைஊதி  எங்கள்
            உள்ளம் உரைவாயடா ...''      ''
           ''            ''            ''              ''     
                          வெல்லச்சீடையுடன் வெண்ணைமுறுக்குசெய்து
                           செல்லமே! காத்திருக்கோம் ...நீ
                         குறும்புசெய்தாலும் பொறுமைஇழக்காமல்
                         கண்ணனே காத்திருக்கோம் ..மணி
                         வண்ணனே காத்திருக்கோம் [ஆரிராராரோ..]
----------------------------------------------------------------------------------------------------------------

         
                                                                              [ஆரிராராரோ...]

         

No comments:

Post a Comment