Tuesday, November 27, 2012

கார்த்திகை பஜனைப்பாட்டு

 
கார்த்திகை பஜனைப்பாட்டு
(Subbusir sings:
http://www.youtube.com/watch?v=yUMK8rcZeDY&feature=player_embedded)

அகல் விளக்கு ஏற்றி வைத்தோம் ,அலைவாய் அழகா!
அஞ்ஞான இருள் அழிப்பாய் ,குன்றாடும் குழகா!
தினையுடன் தேன் உனக்களித்தோம் ,வனமாலிமருகா!
துணைவருவாய் ,வினையறுப்பாய்,முனைவேல்முருகா!
அலைவாய் அழகா!குன்றாடும் குழகா!
வனமாலிமருகா!முனைவேல்முருகா!

ஜகம்புகழும் சிவைமகனே!சுப்பிரமணியா!
தகப்பனுக்குப் பாடஞ்சொன்ன ஒப்பற்ற தனயா!
திகழாறு முகத்தானே!கார்த்திகேயா !
அகம் அமர்ந்து சுகமருள்வாய்,காங்கேயா!
சுப்பிரமணியா!  ஒப்பற்ற தனயா!
கார்த்திகேயா !காங்கேயா!

குஞ்சிதபாதன்மைந்தா!குஞ்சரி காந்தா!
வஞ்சிநாதா!குறிஞ்சிவேந்தா!சண்முகசேந்தா!
சிந்தையிலுன் மந்திரமே,கந்தா!அனந்தா!
உந்தன் திருக்காட்சி தினம் காணும் வரம்தா!
குஞ்சரி காந்தா!சண்முகசேந்தா!
கந்தா!அனந்தா!காணும் வரம்தா!
உனைக்காணும் வரம் தா !
தினம் காணும் வரம் தா!
















 

Monday, November 19, 2012

ஷண்முகனுக்கு ஷடாக்ஷரத்துதி




ஷண்முகனுக்கு ஷடாக்ஷரத்துதி 

க்தி  புத்திரனை சித்தத்தில் நிறைப்போம் .
தாசிவமகனின் திருத்துதி இசைப்போம் .
ண்முகன் நந்நாமம் நெஞ்சில் நினைப்போம் .
காரமுறை குகன் மந்திரம் உரைப்போம்.

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

த்தவர்ணனவன் திருப்பதம்  தொழுவோம் .
ங்கன் மருகனவன் திருப்பெயர் மொழிவோம் .
த்னவேலுடையோன் முன் கை குவிப்போம்.
காரமுறை குகன் மந்திரம் ஜெபிப்போம் .

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

ள்ளிநாயகன் பதம் இதயத்தில் பதிப்போம்.
ரதாயகன்  புகழ் பாடித் துதிப்போம்.
டிவேலவன் நாமம் நாளெல்லாம் நவில்வோம்.
காரமுறை குகன் மந்திரம் பயில்வோம்.

சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

பதிக்கிளையோனின்  வெண்ணீறு  அணிவோம் .
குக்குன்றாம் குமரனின் இணையடி பணிவோம்.
லாய் உதித்தோன்  அருட்சுனையினில் நனைவோம் .
காரமுறை குகன் மந்திரம் நவில்வோம் .

சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

ரமகுருவின் திருப்பொடி  புனைந்திடுவோம். 
ன்னிருகண்ணனின் பதம் பரவிடுவோம். 
க்தவத்சலனைப் பாடிப் போற்றிடுவோம். 
காரமுறைவோன் பேர்  உருவேற்றிடுவோம். 

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்


ண்ணமயில் வாகனனை வணங்கிடுவோம். 
ல்வினையறுப்போனை  வழிபடுவோம். 
ள்ளலை வாழ்த்தித் துதி பாடிடுவோம்.
காரமுறைவோன் மந்திரம் ஓதிடுவோம்.  

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்




 

Saturday, November 17, 2012

ஈசன்மகனே !வா!





ஈசன்மகனே !வா!
(Subbusir sings:
http://www.youtube.com/watch?v=8Z13vf2HFhY&feature=em-share_video_user )

 பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக் 
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!

கயிலாயரின்  அழல் நயனத்தில் பூத்தவனே!
கயல்விழியாள் தவப்பயனே!வா!
உயிரொலியின் பொருள் வினவி,அயனின் செருக்கழித்தவனே!
மயிலேறி நீ விரைந்து வா!

பாசத்தினைப் பிசைந்தேன் ,பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!

வெண்ணீற்று மணங்கமழும்  பொன்னெழில் மேனியனே!
பன்னிருகண்ணனே!வா!
மின்னலென  ஒளிரும் உன்னன்னையின்  வேலேந்தி 
கண்மணியே!சுப்ரமணியா!வா!

பாசத்தினைப் பிசைந்தேன், பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!

ஈசனுக்கு  ஏரகத்தில்   ஆசானாய்ப்  பாடஞ்சொன்ன 
மாசில்லாமணியே !நீவா!
காழிச்சேயாய்த் தமிழில் வீழிநாதன்  புகழிசைத்த 
வேலாயுதா !வேகம் வா !

பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக்
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!