Thursday, October 21, 2010

ஐங்கரனின் பதம்பணிவோம் (மெட்டு - ஸ்ரீகணநாத)

1)பூங்கணை   ஐந்தும்  கரும்புச்சிலையும்               
தாங்குந்தாய்  அபிராமி  தனயன்                       
ஐங்கரனின் பதம்பணிவோம்
சங்கரனின்  செல்லபிள்ளையாம்
ஐங்கரனின் பதம்பணிவோம்
2)லம்போதரன் ,குகசொதரன்
உம்பரும் வணங்கும் விக்னேஸ்வரன்
தும்பிக்கையான் தாள்தொழுவோம்
கொம்பால் மகாபாரதம் எழுதிய
தும்பிக்கையான் தாள்தொழுவோம்
Lord Ganesh Wallpapers: lord ganesha8
3)நாரணன் கைச்சக்கரம் விழுங்கி
தோர்பிக்கரணம் போடவைத்த
வாரணா நனனை  வழிபடுவோம்
பூரணகொழுகட்டைபிரியன்
வாரணா நனனை  வழிபடுவோம்

No comments:

Post a Comment