Thursday, October 28, 2010

ஸ்ரீசாயிநாதா சரணம்
======================
         

கங்கைதீர்த்தம்போல பரமபவித்ரம் ஸ்ரீசாயிநாதன்பாதம் 
செங்கரும்புபோல இனிக்கும் அமிர்தம் ஸ்ரீசாயிநாதன்நாமம்
      

தஞ்சம் என்றோர்க்கு அஞ்சேல் என்றருளும் ஸ்ரீசாயிநாதன்பாதம்           வஞ்சம் நிறைந்த நெஞ்சோரைமாற்றும் ஸ்ரீசாயிநாதன் நாமம் 
                    ஜனனமரணபயத்தினை மாய்க்கும் ஸ்ரீசாயிநாமஸ்மரணம்
                    ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!சரணம் j


  எங்கெங்குமின்பம் பொங்கிடவைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
மங்காமகிழ்ச்சி மனத்தில் நிறைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
இரும்புமனமும் இளகிடவைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!சரணம்

        சங்கடங்கள் தீர்க்கும் ,சஞ்சலங்கள் போக்கும் ஸ்ரீசாயிநாம  ஸ்மரணம்
         மங்களம்எங்கும் தங்கிடவைக்கும் ஸ்ரீசாயிநாம ஸ்மரணம்
         மனமலங்கள் போக்கி குணநலன்கள் சேர்க்கும் ஸ்ரீசாயிநாமஸ்மரணம்
          ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!ஸ்ரீசாயிநாதா!சரணம்
=================================================================================

No comments:

Post a Comment