Sunday, October 17, 2010

அம்மன் பாட்டு (மெட்டு-அத்தை மடி மெத்தையடி )

பொம்மைகொலு வைத்திடுவோம் அம்மனை அழைத்திடுவோம்
தேமதுர தமிழினிலே பாமாலை சூட்டிடுவோம்
நம்மதாயே...துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதியாக வந்திடுவாள்
நமக்கெல்லாம்...வீரம்,செல்வம்,ஞானம் யாவும் தந்திடுவாள்

1) மூன்றிரவு துர்காதேவியாக்கி
சிங்கத்திலவளை ஏற்றிவைப்போம்
துஷ்டரை வெல்லும் திறம்தருவாள்
தாயாய் அவள்நம்மை காத்திடுவாள்...பெற்ற
தாயாய் அவள்நம்மை காத்திடுவாள்

2)மூன்றிரவு மகாலக்ஷ்மியாக்கி
தாமரைபூவினில் ஏற்றிவைப்போம்
பொருள்வளம் பொங்க அருள்புரிவாள்
அள்ளிதரும்வள்ளல் ஆக்கிடுவாள்.. நம்மை
அள்ளித்தரும் வள்ளலாக்கிடுவாள்

3)மூன்றிரவு கையில் வீணைதந்து
அன்னையை சரச்வதியாக்கிடுவோம்
வித்யையும் வினயமும் ஊட்டிடுவாள்
பக்குவஞானியாய் ஆக்கிடுவாள் ..நம்மை
பக்குவஞானியாய் ஆக்கிடுவாள்

No comments:

Post a Comment