Tuesday, October 19, 2010
அம்மனை அலங்கரிப்போம் (மெட்டு- ஹிந்திப்பாட்டு -குங்குரூகிதராஹ் )
அம்மன்மேனியை நாம் அழகாய் அலங்காரம் செய்வோம்
நவராத்திரியில் தாயை சிங்காரம் செய்வோம்
மூன்றுநாள் துர்க்கையாய் , மூன்றுநாள் லக்ஷ்மியாய்
மூன்றுநாள் சரஸ்வதியாய் துதித்திடுவோம் ( அம்மன்மேனியை....)
1 ) செங்கரும்புவில்லும் பூங்கணைகள் ஐந்தும்
அங்குசபாசமும் தாங்கும் மங்கையவள்
சங்கரன்மேனியில் ஒருபங்கானவள்
சங்குசக்கரபாணி யின் தங்கையாம்..(அம்மன்மேனியை ...)
2 ) பக்தன்சொன்ன சொல்லை மெய்யாக்கிடவே
தன் தாடங்கத்தை விண்ணில் விட்டெறிந்தே
அம்மாவாசைவானில் முழுநிலா காட்டிய
அன்னை அபிராமவல்லியின் அருள்பெறவே ..(அம்மன்மேனியை...)
3 ) அன்னபூரணியாம் அவள்காசியிலே
கற்பகாம்பிகையாம் அவள் மயிலையிலே
மதுரைமீனாக்ஷியாய் காஞ்சிகாமாக்ஷியாய்
நாகைநீலாயதாக்ஷியாய் அருள்புரியும் ...(அம்மன்மேனியை...)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment