Thursday, February 17, 2011

திருக்கடவூர் திகழ் அபிராமி !


பருவங்களும் காலம் மாறிடுமே,-நீ
புருவத்தைச் சிறிதே உயர்த்திடினும்!
துருவங்களும் திசை மாறிடுமே -உன்
குறுநகையால் அதர மொட்டவிழ்ந்தால்!(திருக்கடவூர்...)

சுந்தரியே உந்தன் தோளிலொரு கிளி
சொந்தம்போல் சுகமாய்க் குந்திடக்கண்டென்
சிந்தையிலே அழுக்காறு பெருகுதடி!
அந்த நிலை எனக்கும் தந்து அருள் புரி!(திருக்கடவூர்..)

அன்னையே! உந்தன்  கழுத்தினை அணைத்து
கன்னலும் 'தாய்சுகம்' காண்கிறதே!-நான்
அந்நியனோ? நீயென் மாற்றாந்தாயோ?
என்னுயிருன்மேல் சாய்வதென்றோ  தாயே?(திருக்கடவூர்...)

2 comments:

  1. திருக்கடவூர் அபிராமியின் மேல் அழகான பாடல். நல்லாருக்கு அம்மா :)

    ReplyDelete
  2. Lalithamma,
    Beautiful song on Ambaal.
    Please check your e-mails. There should be an invitation from KannanSongs e-groups. Please accept it.
    I have forwarded welcome mails from the members as you have not joined yet.
    ~
    with love,
    radha

    ReplyDelete