Wednesday, May 4, 2011

சரணம் ஷடானனா![கிருத்திகை கீதம்]

          
      சரணம் ஷடானனா![கிருத்திகை கீதம்]


                   விண்ணோரும் தொழும் பன்னிருகண்ணனின்
                    சன்னதியை  நாடு ,--அவன் 
                    புண்ணிய நாமத்தை  எண்ணி இனியதோர் 
                   பண்ணமைத்தே பாடு !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]

                   உருகியுருகி மனமுருகியுருகி  திரு
                   முருகனின் பேரோது,-அவன் 
                  அருகில் வரவும்  அருள்பெருகிவரவுமதைப் 
                   பருகிமகிழ்ந்தாடு !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]

                   பவபயம்போக்கி  நோய்நொடி நீக்கும் 
                   ஔஷதஎழுத்தாறு ,--ஓங்கி 
                  ``சரவணபவனுக்கு அரோஹரா!'' என்றே 
                    பரவசமாய்க் கூறு !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]


                                                        


                  வினைப்பயன் தீர்க்க  முனைவேலேந்தி 
                  வருகிறான் வேல்முருகன் ,--நம்ம
                 பயந்தனைப்போக்க மயில்மீதேறி 
                 வருகிறான்  மால்மருகன் !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா!]


                 தேவயானியுடன்  பாவைவள்ளியுடன்
                வருகிறான்  ஆறுமுகன்,--தீய 
                ஏவல் வினையறுக்கும்  காவல்தெய்வமாய் 
                வருகிறான் குருகுகன் !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா!]







                  

            







                  

2 comments:

  1. வினைப்பயன் தீர்க்க முனைவேலேந்தி
    வருகிறான் வேல்முருகன் ,--நம்ம
    பயந்தனைப்போக்க மயில்மீதேறி
    வருகிறான் மால்மருகன் !

    உண்மை அவன் கால் பட்டு அழிந்தது என் தலைமேல் ஐயன் கைஎழுத்தே!

    ReplyDelete
  2. i sang this krithigai geetham in Raag bhoopalam
    Om Saravana bhava Om Shadanana !!

    you will see this soon in my blog
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete