Saturday, February 5, 2011

கண்டேன் கண்ணனை![மெட்டு-ஆடுவோமே,பள்ளுபாடுவோமே]
======================
[டிவி யில் பிரளயம் வரப்போவதாக பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்;பிரளயம்
வந்தபோது  ஆலிலையில் கட்டைவிரல் சப்பும் கண்ணன் தெரிந்தான்  என்று படித்தது நினைவுக்கு வந்தது!மனத்தில் ஒரு பெரிய ஆங்க்ஸயிடி எழுந்தநேரம் மனத்தை டைவர்ட்
பண்ணுவதற்காக எழுதிய பாட்டு கீழே!]



     பாடுவேனே,மகிழ்ந்தாடுவேனே,
     ஆலிலைப் பாலனைக் கண்ட ஆனந்தத்தில் .[பாடுவேனே]

              பிரளயம் வருமென்று பலர் கூறினார்;
               அழியும் உலகம் என்று பயங்காட்டினார்;
            ஆலிலையில் அவன் தெரிவானென்று
            ஆவலாய் தரிசிக்கக் காத்திருந்தேன்.[பாடுவேனே]

          
            மனத்தில் எழுந்ததோர் மகாப்ரளயம்;
            "முடிந்ததுன் கதை"என்றதென்னிதயம்;
           பாட்டென்னும் ......இந்தப்பாட்டென்னும்
          பாட்டென்னும் ஆலிலையில் அவன் தோன்றினான்!
          கால்விரலைக் கடித்தபடி எனைத்தீண்டினான்!
         " முடிந்ததா உன் கதை?"என்று எனைச் சீண்டினான்!
           பாட்டாய் இதைப்பாட எனைத்தூண்டினான்![பாடுவேனே]
===========================================================

3 comments:

  1. ச்வீட்டான பாடல் அம்மா :)

    ReplyDelete
  2. kavinaya,sankar,
    thanks for visiting.
    pl also go through the AMBAAL NADAGAM and
    SANKARARIN SLEDAI in my blog[in periyavaa's
    simple words]where you can have a taste of
    SANKARA's depth of bakthi, gnaanam besides his poetic skill[specially meant for upcoming poets
    like you]

    ReplyDelete