Saturday, January 22, 2011

  அக[ல்]விளக்கு ஒளிருமா?
=========================
     அகமெனும் அகலிலே எண்ணமெனும் எண்ணையில்
       பக்தித்திரி தோய்த்து இட்டேன் ;
       அகலுக்கு ஒளி சேர்க்க அன்னையே! உன்னிடம்
       அறிவுத்தீ வேண்டி நின்றேன்;
       வேண்டியதை   வழங்கிட ஞானத்தீயாக நீ
       திரியினை நெருங்கி நின்றாய்;
      தீ தீண்டினுந்திரி பற்றாத காரணம்
      புரியாது புலம்பலானேன்;   
        பூரண முயற்சியுடன் ஆராய்ந்தபின் அதன்
      காரணம் கண்டுகொண்டேன்!

       கலியுகக் கடையிலே மலிவாய்க் கிடைத்திடும்
       கலப்பட எண்ணை இது!
       'நான்''எனது' என்றெனது அஹங்காரத்தால் வந்த
        அஞான அழுக்குகளும் ,
        ' ஏன்?'என்ற ஆராய்ச்சியானபின் எஞ்சிய
        விஞ்ஞான விட்டைகளும்,
        கலந்து கெடுத்துவிட்ட கண்ணராவி எண்ணையில்
       திரியினைத் தோய்த்து இட்டால்,
       தீயாய் நீ திரியருகில் வரினும் என் உள்ளகல் 
        ஒளிதீபமாவதேது?

        'நான்' செத்து 'ஏன்'போன பின்னரே இவ்வகல்
         ஒளிருமென்றுணர்ந்தேன் தாயே!
=====================================================

      
     

2 comments:

  1. //'நான்' செத்து 'ஏன்'போன பின்னரே இவ்வகல்
    ஒளிருமென்றுணர்ந்தேன் தாயே!//
    A meaningful ode.
    It is that self introspection which reveals the main source of all the ills that we face in life , and that is that "I"

    subbu rathinam
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  2. naanum,enum ponaalthaan unconditional,total surrender[poorana charanaagathi]enra nilaiyai
    adaiyamudiyum enbathu purigirathu,sir.anaal
    practicil athaik konduvarathu rombakkadinam,illaiyaa?thanks for your prompt
    feedback ,surysir!

    ReplyDelete