[இடைவேளை]
காலை கண்ட காட்சி
--------------------------------
மேகங்களாம் தோழியர்கள் மழைநீரால் குளிப்பாட்ட ,
பசுமரமாம் பருவமகள்
ஈரத்தலை காய்வதற்கு இலைமுடியைச் சிலிர்த்துதறி,
பொற்கிரண நூலிழையால் பகலவன் நெய்தளித்த
வெய்யிலெனுந் துவாலையால் தலை துவட்டி, தவழுந்
தென்றலையே சீப்பாக்கித் தலைசீவி மலர்சூடி,
மணக்கோலம் பூண்டு நிற்க ,
காத்திருந்த 'வானம் ' எனும் காதலனும் மரமகளை
மணமுடிக்க மாலை செய்தான் வண்ண வண்ண வானவில்லால்!
மாலை கண்ட வீழ்ச்சி
----------------------------------------
மாலைசூடக் காத்திருந்த
மணமகளின் மேனிதனைக்
கோடரி கொண்டு வெட்டிக்
கொடுமையாய்க் கொன்றுவிட்டு,
நல்லவன்போல் நடமாடும்
நகரவாசியே! நீ ஓர்
நாகரிகக் காட்டுமிராண்டி!
-----------------------------------------------------------------------------------------------------
காலை கண்ட காட்சி
--------------------------------
மேகங்களாம் தோழியர்கள் மழைநீரால் குளிப்பாட்ட ,
பசுமரமாம் பருவமகள்
ஈரத்தலை காய்வதற்கு இலைமுடியைச் சிலிர்த்துதறி,
பொற்கிரண நூலிழையால் பகலவன் நெய்தளித்த
வெய்யிலெனுந் துவாலையால் தலை துவட்டி, தவழுந்
தென்றலையே சீப்பாக்கித் தலைசீவி மலர்சூடி,
மணக்கோலம் பூண்டு நிற்க ,
காத்திருந்த 'வானம் ' எனும் காதலனும் மரமகளை
மணமுடிக்க மாலை செய்தான் வண்ண வண்ண வானவில்லால்!
மாலை கண்ட வீழ்ச்சி
----------------------------------------
மாலைசூடக் காத்திருந்த
மணமகளின் மேனிதனைக்
கோடரி கொண்டு வெட்டிக்
கொடுமையாய்க் கொன்றுவிட்டு,
நல்லவன்போல் நடமாடும்
நகரவாசியே! நீ ஓர்
நாகரிகக் காட்டுமிராண்டி!
-----------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment