Tuesday, January 25, 2011

[இடைவேளை]
      
           காலை கண்ட காட்சி
           --------------------------------
   மேகங்களாம் தோழியர்கள் மழைநீரால் குளிப்பாட்ட ,
    பசுமரமாம் பருவமகள்
    ஈரத்தலை காய்வதற்கு இலைமுடியைச் சிலிர்த்துதறி,
     பொற்கிரண நூலிழையால் பகலவன் நெய்தளித்த
    வெய்யிலெனுந் துவாலையால் தலை துவட்டி, தவழுந்
    தென்றலையே சீப்பாக்கித் தலைசீவி மலர்சூடி,
    மணக்கோலம் பூண்டு நிற்க ,
   
   காத்திருந்த 'வானம் ' எனும் காதலனும் மரமகளை
    மணமுடிக்க மாலை செய்தான் வண்ண வண்ண வானவில்லால்!

           மாலை கண்ட வீழ்ச்சி
          ----------------------------------------
மாலைசூடக் காத்திருந்த
 மணமகளின் மேனிதனைக்
   கோடரி கொண்டு வெட்டிக்
    கொடுமையாய்க் கொன்றுவிட்டு,
      நல்லவன்போல் நடமாடும்
        நகரவாசியே! நீ ஓர்
         நாகரிகக் காட்டுமிராண்டி!
-----------------------------------------------------------------------------------------------------

 

           

 
           
             

No comments:

Post a Comment