Saturday, November 17, 2012

ஈசன்மகனே !வா!





ஈசன்மகனே !வா!
(Subbusir sings:
http://www.youtube.com/watch?v=8Z13vf2HFhY&feature=em-share_video_user )

 பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக் 
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!

கயிலாயரின்  அழல் நயனத்தில் பூத்தவனே!
கயல்விழியாள் தவப்பயனே!வா!
உயிரொலியின் பொருள் வினவி,அயனின் செருக்கழித்தவனே!
மயிலேறி நீ விரைந்து வா!

பாசத்தினைப் பிசைந்தேன் ,பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!

வெண்ணீற்று மணங்கமழும்  பொன்னெழில் மேனியனே!
பன்னிருகண்ணனே!வா!
மின்னலென  ஒளிரும் உன்னன்னையின்  வேலேந்தி 
கண்மணியே!சுப்ரமணியா!வா!

பாசத்தினைப் பிசைந்தேன், பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!

ஈசனுக்கு  ஏரகத்தில்   ஆசானாய்ப்  பாடஞ்சொன்ன 
மாசில்லாமணியே !நீவா!
காழிச்சேயாய்த் தமிழில் வீழிநாதன்  புகழிசைத்த 
வேலாயுதா !வேகம் வா !

பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக்
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!


 

No comments:

Post a Comment