Wednesday, October 31, 2012

ஆறெழுத்தோது!



               ஆறெழுத்தோது !

இணையுன் மனத்தை குகனின்  பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!

நாதம்பிறந்ததவன் பொருள்சொன்ன பிரணவத்தில் !
கீதம்பிறந்ததவன் கிண்கிணிக்கழலொலியில்!
வேதங்கள்வாழ்த்திடும் வண்ணமயிலோனவன்
பாதங்களே படகாம் பிறவிக்கடல்தாண்ட!

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!

பாயும்புலியுமோர் பூனைபோல் பதுங்கிடும்,
நோய்களும்பேய்களும் அண்டாமல் ஒதுங்கிடும்,
தீயுந்தணிந்து இளந்தென்றலாய்த்தழுவிடும்,
ஓயாதவன்நாமம் ஓதியே  வழிபட்டால்!

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!


 
நடந்தாலவன் கோயில் நோக்கிமட்டும் நட!
படுத்தாலவன்பாதம் பணியமட்டும் படு !
அறிவிலியே! வாய்திறந்தால் கடைதேற்றும்
ஆறெழுத்தையோத மட்டும் அசை உன் நா !

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!


 
முகங்கள் மூவிரண்டுமுன் அகத்தினில் நிலைத்திடில்
நிகழ்பவையாவும் சுபமே!-இடர்நீக்கும்
விகடச்சக்கரன்தம்பி விரைகழல்பற்றியே
புகலடைந்தோர் வாழ்வில் பொங்கிடும்மங்களமே !

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!

 

No comments:

Post a Comment