Tuesday, July 10, 2012

வேலவா!வா!!



வேலவா!வா!!

கந்தன் என்றால் கருணை வடிவம்;

கார்த்திகேயன் காக்கும் தெய்வம்;
குமரன் அவனைக் கும்பிட்டு தினம்
கூவி அழைப்போம்;கூடி அழைப்போம்.


கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!


ஆலவாயானுக்கு ப்ரணவப்பொருள் சொன்ன
வேலவா!வடி வேலவா!
கோல மயிலேறி ஞாலம் வலம் வந்த
பாலனே!எனை ஆளவா!

கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!


அமரரைக்காக்க அசுரரைத்துணித்த
குமரேசா! வள்ளி மனவாசா !
தில்லை நடம் செய் கனக சபேசனின்
பிள்ளையே ! எனை ஆள வா!


கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!


மண்ணிலுதிர்த்த பழங்களை ஊதி
உண்ணச்சென்ற அவ்வைப்பாட்டியை
"பழம் சுடுதோ?"என்று குறும்பாய் வினவிய
குழந்தையே ! எனை ஆள வா!


கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!




"சரவணபவா" என்று தூய மனத்தோடு
ஒரு முறையே அழைத்தாலும்
சிறு குறையுமின்றி காத்தருள் புரிந்திடும்
கருணாகரா! எனை ஆள வா!

கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!

2 comments:

  1. அழகான பாடல் அம்மா. குறிப்பாக முதல் பத்தி மிகப் பிடித்தது :)

    ReplyDelete