Tuesday, July 31, 2012

அக்னிப்பூவே!வந்தனம் !



அக்னிப்பூவே!வந்தனம் !

தென்றல் தாங்கிவர,கங்கை வாங்கித்தர,
கன்னியர் வளர்த்த அக்னிப்பூவே!
மன்றாடி மைந்தா!குன்றாடுங்கந்தா!
வந்தனம்!அமரர் படைக்கோவே!

புனலணியும் அரனின் அனல்விழிப்பொழிலில் 
         அரும்பிய ஞானக் கனற்போதே !
உனைப்பணிந்திடுவோர் மன இருள்தன்னை 
          மாய்த்திட வருவாய் மயில்மீதே! 

தென்றல் தாங்கிவர,கங்கை வாங்கித்தர,
கன்னியர் வளர்த்த அக்னிப்பூவே!
மன்றாடி மைந்தா!குன்றாடுங்கந்தா!
வந்தனம்!அமரர் படைக்கோவே!

நிலவணியும் நிமலன் நங்கையுறவின்றி
            விழியால் படைத்த அதிசயமே  !
கலியுக வரதா!மலரடி தொழுதோம்;
           அகற்றிடுவாய் எங்கள் பவபயமே!

தென்றல் தாங்கிவர,கங்கை வாங்கித்தர,

கன்னியர் வளர்த்த அக்னிப்பூவே!
மன்றாடி மைந்தா!குன்றாடுங்கந்தா!
வந்தனம்!அமரர் படைக்கோவே!






No comments:

Post a Comment