Tuesday, July 24, 2012

மயிலே!மனமார்ந்த நன்றி!



மயிலே!மனமார்ந்த நன்றி!
( "தீராத விளையாட்டுப் பிள்ளை " மெட்டு )


மயிலே! உனக்கு மிகவும்  நன்றி,--நாங்கள்
தவிக்கிறோம் உனைப்புகழத் தகுந்தசொல் இன்றி.[.மயிலே....]

கனிக்காக உன்மேல்புவி பவனி ...வந்த
கந்தன் கனிகிட்டாமல் சினந்தாண்டியாகி ,
தென்பழநிமலையில் எழுந்தருளி ...தமிழ்த்
தெய்வமாய்த் தமிழர்க்கு அருளவழிசெய்த

மயிலே உனக்கு மிகவும் நன்றி!

 பழனியிலே ஆண்டிக்கோலம்,..ஸ்வாமி

மலையிலே ஓங்காரம் விளக்குங்குருக்கோலம் ,
செந்தூரில் சிவபூஜைக்கோலம் ...என்று
கந்தனின் கோலம்பல காணவழிசெய்த

 மயிலே உனக்கு மிகவும் நன்றி!

 குன்றத்தில் சுரமகள் கணவன் ,..குறக்

கன்னியுடன் பழமுதிர்ச்சோலையில் முனிவன் , 
தணிகையில் வள்ளியின் துணைவன்,--என்று
குகனின் எழிற் கோலம்பல காணவழிசெய்த


மயிலே உனக்கு மிகவும் நன்றி,--நாங்கள்

தவிக்கிறோம் உனைப்புகழத் தகுந்தசொல் இன்றி.
மயிலே மனமார்ந்த நன்றி!!--வண்ண
மயிலே மனமார்ந்த நன்றி!!--தோகை
மயிலே மனமார்ந்த நன்றி!!

மனமார்ந்த நன்றி!!



















No comments:

Post a Comment