Sunday, May 20, 2012

சண்முகா!வா!

( "சுந்தர் கான்ஹா"என்று தொடங்கும் AOL பஜன் மெட்டில்
 பாடுவதாக (?)எண்ணி அந்தமெட்டை (பாடாப்படுத்தி) ஒருவழியாக்கி
 இணைத்து விட்டேன்;பாட்டைக் கேட்பவர்களுக்கு BEST OF LUCK !)

சங்கரிபாலா,சிங்கார வேலா!
சம்புகுமாரா,சூரசம்ஹாரா!
பழனிமலை வாசா,கந்தா,பாபவினாசா!
பழமுதிர்ச்சோலை வாழும்குமரேசா

நீலகண்டன் நுதல்விழியில் தோன்றியமுருகா,
நீலமேகச்யாமளனாம் மாயவன்மருகா!

சண்முகா !சிவகுகா!

வண்ணமயில் ஏறி வா!
வள்ளியின் நாயகா!
வெள்ளிவேல் ஏந்திவா!

சங்கரிபாலா,சிங்கார வேலா!

சம்புகுமாரா,சூரசம்ஹாரா!


அபிராமவல்லியின் ஆருயிர்மைந்தா!
அயனின் அஹங்காரந்தனை அடக்கியகந்தா!

சண்முகா !சிவகுகா!

வண்ணமயில் ஏறி வா!
வள்ளியின் நாயகா!
வெள்ளிவேல் ஏந்திவா!

சங்கரிபாலா,சிங்கார வேலா!

சம்புகுமாரா,சூரசம்ஹாரா!


ஆறுபடை வீடமரும் ஆறுமுகா,வா,
நீறணியும் நிர்மலனே,கார்த்திகேயா !வா!

சண்முகா !சிவகுகா!
வண்ணமயில் ஏறி வா!
வள்ளியின் நாயகா!
வெள்ளிவேல் ஏந்திவா!

சங்கரிபாலா,சிங்கார வேலா!

சம்புகுமாரா,சூரசம்ஹாரா!


சரவணபவா ஓம் முருகா,வா,
கருணாஸாகரா,குமரா,வா,
சரவணபவா ஓம் முருகா வா,
குறமகள் வள்ளியமுதா!வா!

சங்கரிபாலா,சிங்கார வேலா!

சம்புகுமாரா,சூரசம்ஹாரா!
பழனிமலை வாசா,கந்தா,பாபவினாசா!
பழமுதிர்ச்சோலை வாழும்குமரேசா



No comments:

Post a Comment