Friday, April 13, 2012

புத்தாண்டுக் கும்மி

புத்தாண்டுக் கும்மி

நந்தன ஆண்டு பிறந்ததடி ! -தமிழ்ச்
சிந்தொன்று நெஞ்சில் சுரந்ததடி !
தெய்வங்களின்  புகழ்  இசைத்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடி கும்மியடி!


தொடங்கியவை நடந்தேறுமடி-ஏதும்
தடங்கலின்றி நிறைவேறுமடி !
 தந்தனைப் போற்றித்  துதித்தபடி,-பெருந்
தொந்தனைப் போற்றித் துதித்தபடி-இரு
 கைதட்டிக்   கொண்டாடி கும்மியடி !
கைதட்டிக் கொண்டாடிக் கும்மியடி !

கருணைமுகில் மழை பொழியுமடி-மன
மலங்கள் அழிந்து ஒழியுமடி!
கந்தனை வந்தனை செய்தபடி -உமை
மைந்தனை வந்தனை செய்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி ! 
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !

அஞ்செழுத்து அருள் புரியுமடி -நமது
நெஞ்சத்தில் நிம்மதி நிறையுமடி!
ஈசனைத்தோத்திரம் செய்தபடி -உமை
நேசனைத்தோத்திரம் செய்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !

மெஞ்ஞானப்பேரொளி பாயுமடி-மன
அஞ்ஞானப் பேரிருள் மாயுமடி
சாமளையைப் பாடித்துதித்தபடி -அபி
ராமியைப்  பாடித்துதித்தபடி   -இரு                
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !

பேரருள் வெள்ளம் பெருகுமடி-கலி
தீர்த்து அபயம் அருளுமடி!
நாரணனை நெஞ்சில் நினைத்தபடி-பரி
பூரணனை நெஞ்சில் நினைத்தபடி -இரு  
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !

மங்களம் எங்கெங்கும்  பொங்குமடி-அது
மங்காமல் என்றென்றும் தங்குமடி!
திருமகள் பெருமையை இசைத்தபடி-செல்வம்
அருள்பவள் பெருமையை இசைத்தபடி-இரு  
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !

கலைகளெல்லாம் வளர்ந்தோங்குமடி-நாம்
கடையோர் எனும் நிலை நீங்குமடி!
பாரதியின் புகழ் இசைத்தபடி -ஞான
வாரிதியின் புகழ் இசைத்தபடி -இரு                    
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !




நந்தன ஆண்டு பிறந்ததடி ! -தமிழ்ச்

சிந்தொன்று நெஞ்சில் சுரந்ததடி !
தெய்வங்களின் புகழ் இசைத்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடி கும்மியடி!
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !






















































1 comment:

  1. Song and lyrics are good. Paadra chinna kuzhanthai yaru? :))

    ReplyDelete