Tuesday, December 21, 2010

ஷ்யாமா!சேஷனுக்கு ஓய்வு  கொடு! 
================================[மெட்டு-மன் தடப்பது ஹரிதர்சனு ]
     ஷ்யாமா, இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்,
     சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்,
    தவழ்ந்தெங்கும் தளிர்விறல் தடங்கள் பதிப்பாய்,
    நவநீதா,உரிவெண்ணையுண்டு களிப்பாய்.[ஷ்யாமா...]

           இருள்நிறை சிறைதனில் பரிதியாய் உதித்த
           அருட்பெருஞ்ச்ஜோதியே,தேவகினந்தனா,
            நாகம் குடைபிடிக்க ,நதிவழிகொடுக்க ,
           கோகுலம் விரைந்த வசுதேவனந்தனா[ஷ்யாமா..]

   பாலூட்டிக்கொல்லவந்த  பூதனையை
   பல்லால் கடித்துயிர்குடித்த ஸ்ரீதரா,   
  கயிற்றால் உரலில்கட்டிவைத்த தாய்முன்
   உரலை இழுத்தவண்ணம் தவழ்ந்த தாமோதரா,[ஷ்யாமா..]

                 பெருமழையில் பரிதவித்தோரைக்காக்க
                 சிறுவிரலால்கிரிசுமந்த கோவர்த்தனா,
               விடநாகததையடக்கி அதன்மேல்
                களினடம்புரிந்த காளிங்கனர்த்தனா[ஷ்யாமா..]

      கோபியர்சுமந்த நீர்க்குடந்தன்னை
      கல்லெறிந்து டைத்த  நந்தகிஷோரா,
      குறும்புத்தோழர் தோள்மேலேறி
      உரிவெண்ணை திருடிய நவநீதசோரா[ஷ்யாமா..]

                     குளிக்குங்க்கோபியர் ஆடையைமறைத்து
                    குரும்பாய்ச்சிரித்த கோகுலபாலா,
                        ஈனர்கை சிக்கிய பாஞ்சாலியவள்
                      மானங்காத்த  தீனதயாளா,[ஷ்யாமா..]

         ஓரடியால் உலகளந்து பலியை
         காலால்வதைக்கவந்த வாமனக்கோலா,
        கால்விரல்ருசிக்கும் சிசுவாய்பிரளய
       காலத்தில் தோன்றிய ஆலிலைபாலா[ஷ்யாமா.]

                         சேய் அழைத்ததுமே  தூணிலே தோன்றி
                        தீயனைமாய்த்த தூயநரசிங்கா,
                        எங்களுக்கிறங்கி இங்கின்று வருவாய் ,
                        பங்கஜ நயனா ஹே,பாண்டுரங்கா[ஷ்யாமா..]
============================================================

No comments:

Post a Comment