Wednesday, December 22, 2010

   பிள்ளையார் பதினாறு
=======================
சுமுகா,சரணம்.ஏகதந்தா சரணம்.
கபிலா,சரணம் .கஜகர்ணா,சரணம். ...கணேசா,சரணம்
       சின்ன எலிக்கும் உன் வாகனமென்ற
       உன்னதபதவியைக் கொடுத்து உயர்த்தி
       இன்னருள் புரிந்த இறைவா,சரணம்...கணேசா,சரணம்

லம்போதரா,சரணம்.விகடா,சரணம்.
விக்னராஜா,சரணம்.விநாயகா,சரணம்...கணேசா,சரணம்.
          அரியின் சக்கரம் பிடுங்கி விழுங்கி
          தோர்பிக்கரணம் போடவைத்து
           சிரித்து நின்ற கரிமுகா,சரணம்...கணேசா,சரணம்.

 தூமகேது ,சரணம்.கணாத்யக்ஷா,சரணம்.
 பாலச்சந்தரா,சரணம்.கஜானனா,சரணம்...கணேசா,சரணம்.
             கஜவடிவில் குறவள்ளியைத்துரத்தி
             குகனிடம் அவளைச் சரண்புகவைத்து
             நன்மணம் நடத்திய நாயகா,சரணம்...கணேசா,சரணம்.

 வக்ரதுண்டா,சரணம்.சூர்ப்பகர்ணா,சரணம்.
 ஹேரம்பா,ஸ்கந்த பூர்வஜா,சரணம்...கணேசா,சரணம்.
             தொடங்கிய யாவும் தடங்கலே இன்றி
              தொடர்ந்து நடந்து முடிந்திட அருள்வாய்.
               இடர்களைநீக்கும் கடவுளே,சரணம்...கணேசா,சரணம்.
                                                                                              ''            ''        ''      ''
                                                                                              ''            ''        ''       ''
-----------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment