Thursday, October 18, 2012



நவராத்திரி துதி பாடுவோம்

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

பங்கயக்கரங்களில் பூங்கணை ஐந்தும் ,
செங்கரும்பும் பாசாங்குசமும் தாங்கி
அன்பால் நம்மை ஆண்டருள் புரியும்
அம்பிகையவளின் ஒன்பது இரவும்
கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

முதல் மூன்றிரவினில் துர்க்கையாகி
தீயசக்திகளை மாய்த்து ஒழிக்க
நெஞ்சுறமும் உடல்பலமும் அருளும்
கருணாசாகரி,பரமேஸ்வரியை

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

இடை மூன்றிரவினில் திருமகளாகி
குறைவற்றதனமும் நிறைந்தமனமும்
இல்லார்க்கீயும் வள்ளல்குணமும்
நமக்கருளும் இமகிரிமகளவளை
கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

கடை மூன்றிரவினில் கலைமகளாகி
அஞானமகற்றி மெய்ஞானமூட்டி
ஆயகலைகள் அறுபத்துநான்கும்
அருளும் தாய் அபிராமவல்லியை

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

மங்கலந்தரும் சங்கரன் மங்கையவள்;
சஞ்சலந்தீர்க்கும் ரங்கனின் தங்கையவள்;
என்றும் வற்றா கருணைக் கங்கையவள்;
நம் நலங்காக்கும் நவராத்திரி நங்கையவள்.

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

No comments:

Post a Comment