Wednesday, September 19, 2012

தெருமூலை தெய்வம்


 தெருமூலை தெய்வம்
(மெட்டு -அமைதியான நதியினிலே ஓடம்)

தெருமூலை தெய்வம் பிள்ளையாரு--அரச
நிழலில் குந்தி நம்மை ஆள்கிறாரு;
எளியவர்க்கு எளியவராய்
எலிமேலே ஏறிவரும்
கலியுகத்துக்கடவுள் பிள்ளையாரு --எங்கள் (தெருமூலை)

சதுர்த்தியிலே சனங்களெல்லாம்
கூடிநின்று குடைபிடிக்க,
ஊர்வலமாய் சுத்திவந்து
தீர்த்துவைப்பார் நம்மகுறை;
காத்திடுவார் கடைசி வரை
தெருமூலை தெய்வம் பிள்ளையாரு-.....

உள்ளத்திலே அவரை எண்ணி
புல்லைப்போட்டு பூசைபண்ணி

படைத்திடுவோம் தேங்காதண்ணி;
முடித்துவைப்பார் எடுத்தபணி ;
தடங்கலே வராது இனி !
தெருமூலை தெய்வம் பிள்ளையாரு-



No comments:

Post a Comment