![[Bharathi.jpg]](http://4.bp.blogspot.com/_O1oefrFkNkg/TEZ-yao-fVI/AAAAAAAAAr8/YLBc9TaECkA/S220/Bharathi.jpg)
பாரதியாரின் முருகன்பாட்டு
( 11th செப்டெம்பர் பாரதியாரின் நினைவுநாள் )
subbusir sings:
http://kandhanaithuthi.blogspot.in/2012/09/blog-post.html
வீரத்திருவிழிப் பார்வையும் -வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே -எந்த
நேரத்திலும் என்னைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
ஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை என்னுள்ளம் நாடுதே;-மலை
வாரத்திலே விளையாடுவான்-என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான் .
வேடர்கனியை விரும்பியே-தவ
வேடம்புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே -முனி
நாதனுக்கிம்மொழி கூறுவான் ;-சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட -இருட்
பாரமலைகளைச் சீறுவான் ;-மறை
யேடு தரித்த முதல்வனும் -குரு
வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான் .
தேவர் மகளை மணந்திடத் -தெற்குத்
தீவிலசுரனை மாய்த்திட்டான்;-மக்கள்
யாவருக்குந்தலை யாயினான்;-மறை
அர்த்தமுணர்த்து நல்வாயினான்;-தமிழ்ப்
பாவலர்க்கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரில் அறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவலறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.
தீவளர்த்தே பழவேதியர் -நின்றன்
சேவகத்தின் புகழ் காட்டினார்;-ஒளி
மீவளருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையினாலறம் நாட்டினார்;-ஐய!
நீவளருங்குருவெற்பிலே;-வந்து
நின்று நின் சேவகம் பாடுவோம் -வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)
No comments:
Post a Comment