Thursday, August 23, 2012

நலந்தரும் தலம்


நலந்தரும் தலம்

( "கங்கைக் கரைத் தோட்டம்"..மெட்டில் பாடிப்பாருங்க )

அமரரைக்காக்க
       அசுரரையழித்த
குமரன் அமர்ந்த தலம் ..செந்தூர்
         நலந்தரும் புனித தலம்.
சீரலைவாய் என   
          பாரோர்புகழும்
பேருடன் திகழும் தலம் ..செந்தூர்
         ஆழ்கடல் சூழ்ந்த தலம்

சூரபத்மன் தன்னைக்கொன்று,
வெற்றிமாலை சூடிக்கொண்டு,
செந்தில்மலை வந்தகந்தன்
தந்தையாரைப்  பூஜைசெய்ய
பூவேந்தும்  கரத்தானாய்  
பவ்யதிருக்கோலம்
காட்டும் திவ்யதலம்..செந்தூர்
பக்தரின் புண்ய தலம்.

அமரரைக்காக்க
               அசுரரையழித்த
குமரன் அமர்ந்த தலம் ..செந்தூர்
               நலந்தரும் புனித தலம்.

பன்னிருகரத்தவனை
பயபக்தியாய்ப்பணிந்து,
பன்னீரிலையில் தந்த
வெண்ணீற்றினைஅணிந்தால்
அல்லலெல்லாம்  நீங்கும்;
செல்வவளம் ஓங்கும்;
 நிழலெனத் துணைவருவான் -கந்தன்
கழலினில் புகல்  தருவான் .

அமரரைக்காக்க
        அசுரரையழித்த
குமரன் அமர்ந்த தலம் ..செந்தூர்
          நலந்தரும் புனித தலம்.



 

No comments:

Post a Comment