
கனலாய் உதித்த அருட்புனல்
(subbu sir sings:
http://www.youtube.com/watch?v=RBucGWKRJDo&feature=player_embedded )
புனல்சூடும் புராரியின் நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!
கனியால் கனிந்து கோவணாண்டிக்கோலம்
புனைந்த பழநிபாலா!
உனை நினைந்துருகும் பக்தரின் முந்தை
வினைமுறி வடிவேலா!
புனல்சூடும் புராரியின் நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!
ப்ரணவப்பொருள் சொல்லி பரமகுருவான
புனிதா!சுவாமிநாதா!
அனுதினம் ஆறெழுத்தை ஜெபிப்போர்க்கு
இனி பிறவா வரம் தா !
புனல்சூடும் புராரியின் நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!
தினையுடன் மனமும் தந்த வனிதையை
மணந்த தணிகையழகா!
"துணைநீயே!"எனும் தீனரை அருளாலே
அணைத்திடு!ஆறுமுகா
புனல்சூடும் புராரியின் நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!
No comments:
Post a Comment