Saturday, July 14, 2012

அருந்து ஆறெழுத்தெனும் மருந்து !

                   
அருந்து ஆறெழுத்தெனும் மருந்து !
(சுப்பு ஐயா கீழுள்ள லிங்கில் பாடுவதைக் கேட்கவும்)
http://www.youtube.com/watch?v=dJpN5oNH_kA&feature=em-share_video_user

http://www.youtube.com/watch?v=wofBs1SDGzU&feature=youtu.be


ஓம்சரவணபவா சரணம் ,ஓம்சரவண பவா சரணம்,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்

கனிகிட்டாத காரணத்தாலே
சினந்ததுபோலொரு லீலைசெய்து
அனைத்தும் துறந்து ஆண்டிக்கோலம்
புனைந்த பழநிபாலா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்,




பரமனுந்திருவாய் மூடியே உந்தன்
விரைகழலருகே வினயமாய் அமர ,
பிரணவம் விளக்கி சிவகுருவான
ஏரகஸ்வாமிநாதா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்,




அரிமகள் அம்ருதவல்லியாய்ப்பெருந்தவம்
புரிந்தே இந்திரன்மகளாய்ப்பிறந்த
சுரகுஞ்சரியை நன்மணங் கொண்ட

திருப்பரங்குன்றக் குமரா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,

எழில்மிகு குறமகள் வள்ளியின்முன்னே

கிழமுனிவரின் வேடத்தில் வந்து
பழகியே பற்பல லீலைகள் புரிந்த
பழமுதிர்ச் சோலை வேலா!


ஓம்சரவண பவா, ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,

திருமால்செல்வி சுந்தரவல்லியாய்

அருந்தவம்புரிந்து குறமகளாய் மறு
பிறவி எடுத்த வள்ளியை  மணந்த
திருத்தணிகை முருகா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம்
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,

ஆறெழுத்துள்ள உன்பேர்ஜெபிப்போர்க்கு

நீறுடன் பன்னீரிலைதனையருளி
தீராநோய்களைத் தீர்த்தருள்புரியும்
சீரலைவாய் முருகா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா, ஓம்சரவண பவாசரணம்
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,





3 comments:

  1. you can listen this song here.
    here.
    subbu rathinam
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. thanks sury sir !
      i went on listening ..don't remember how many times!

      Delete
    2. subbusir,
      அடாணாவில் இன்னும் ரொம்ப ஆனந்தமா இருக்கு;அதன் லிங்கை முதலாவதா கொடுத்திருக்கேன்;நன்றி!

      Delete