Sunday, May 13, 2012

அம்மா!அம்மா!


                       365/366 நாளும் "அம்மாதினம்" தான் !
ஆனாலும் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினமாகக்
கொண்டாடும்போது எனக்கும் நம் அன்னையைப்
பாடிக் கொண்டாடவேண்டும் என்று அடக்கமுடியாத ஆசை!மூன்றுமாதம் முன் "அம்மன் பாட்டு "வலையில் நான் எழுதி
சுப்பு ஐயாபாடிய "அம்மா!அம்மா!" பாட்டு
இன்றைய தினத்துக்குப்பொருத்தமாகத் தோன்றவும்
அப்பாட்டை இவ்வலையில் இன்று அளிக்கிறேன்!


                                               அம்மா!அம்மா!
( subbu sir sings:
   http://ammanpaattu.blogspot.in/2012/01/blog-post_26.html  )



"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

தாய்மையின் மேன்மை நீயே அம்மா,அம்மா!
பெண்மையின் மென்மை நீயே அம்மா,அம்மா!
மெய்ம்மையின் தூய்மை நீயே அம்மா,அம்மா!
புன்மை போக்கும் புடம் உந்தன் பதந்தானம்மா !


"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !


இதமான சுகநாதம் "அம்மா,அம்மா!"
இதயத்தின் சங்கீதம் "அம்மா,அம்மா!"
முதலான மதலைச்சொல் "அம்மா,அம்மா!"
நிதமெந்தன் நெஞ்செல்லாம் நீயே அம்மா!


"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !


அன்பகமே!செண்பகமே!அம்மா,அம்மா!
அஞ்சுகமே!எனக்கபயம் !அம்மா,அம்மா!
நின் கழலில் நான் தஞ்சம் அம்மா,அம்மா!
நின் நிழலே என் மஞ்சம் அம்மா,அம்மா!


"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில் அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

2 comments: