Friday, December 9, 2011

வந்தான் முருகன்




            வந்தான் முருகன்

அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,
அன்பர்தன் துன்பத்தை தீர்க்கவந்தான் முருகன்;
                                                   தீர்க்கவந்தான் முருகன்!

தந்தைதாயினைத் துறந்தான் -தென்
பழநிநோக்கிப் பறந்தான்;
தண்டபாணியாய் அமர்ந்தான்,-தூய
அன்பர்க்கு அருள்புரிந்தான்.
ஷண்முகன் ,சிவகுகன்,பாவைவள்ளியின் நாயகன்.

அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,

 பிள்ளையாருக்குப் பின்னவன் -,பிரணவப்
பொருளை விளக்கிச்சொன்னவன்;
தேவயானி மனமோகனன்,-வண்ணத்
தோகைமயில் வாகனன்.
ஷண்முகன் ,சிவகுகன்,பாவைவள்ளியின் நாயகன்

அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,

 பரமனின் ப்ரியபுதல்வன்,-அவன்
சுரசைன்யத்தின் முதல்வன்;
அபிராமவல்லி நந்தனன் ,-தீய
தாரகாசுர மர்த்தனன் .
ஷண்முகன் ,சிவகுகன்,பாவைவள்ளியின் நாயகன்.

அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,
அன்பர்தன் துன்பத்தை தீர்க்கவந்தான் முருகன்;
                                                   தீர்க்கவந்தான் முருகன்!

2 comments:

  1. அழகான பாடல்

    பாடிப் பதிவிடுங்களேன் Please.

    ReplyDelete
  2. நல்லாருக்கு அம்மா!

    ReplyDelete