Monday, November 28, 2011

ஓம் சரவணபவ



                 ஓம் சரவணபவ

'ஸ்டார்  விஜய் 'இல் காலையில்  'அருணாசலசிவ....' கேட்டு
ரசித்துக்கொண்டிருக்கையில்  அதே ராகத்தில்  முருகனைப்பாடத்
தோன்றியது! எழுதிவிட்டேன் ;பாடிப்பாருங்களேன்!  )


சரவணபவ  எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை  தினமோதுவோம்;
கருணையே வடிவமாம்  குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம்  நனைந்தாடுவோம்!

ஒம்சரவணபவ  ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

பண்டார வேசனாம்,ஞானப்ரகாசனாம்,
தென்பழனிவாசனின்  பதம் நாடுவோம்;
குஞ்சரி நேசனாம்,குன்றக்குமரேசனாம்,
கொஞ்சும் வஞ்சிதாசனைக் கொண்டாடுவோம்!

ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

சரவணபவ எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை தினமோதுவோம்;
கருணையே வடிவமாம் குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம் நனைந்தாடுவோம்!

தகதகதகவென நிகரற்ற ஒளியுடன்
திகழ்கின்ற  வேல்தாங்கும் தயாபரன்,
ஜெகம்புகழ் ஷண்முகன்,மகிமையை எண்ணியெண்ணி
அகமகிழ்ந்தவனைத் துதிபடுவோம் !

ஒம்சரவணபவ,ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

சரவணபவ எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை தினமோதுவோம்;
கருணையே வடிவமாம் குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம் நனைந்தாடுவோம்!

ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

2 comments:

  1. YOU MAY LISTEN TO THE SONG HERE ALSO

    subbu rathinam
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  2. அருமை மேடம்.

    ராகம் தெரியவில்லை. பாடிப் பதிவிடலாமே.

    நானும் ஓம் சரவணபவ என்று பதிவிட்டிருக்கிறேன்

    ReplyDelete