Friday, November 11, 2011

ஞானமருள்வாய்,வேலவா!

       ஞானமருள்வாய்,வேலவா! 



நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!

வள்ளலே உன்திருமந்திரம் இனித்திடும் செந்தேன்,
உள்ளத்திலே அதனையோதி காத்துக் கிடந்தேன் ;

ஓம் சரவணபவா!
ஓம் சரவணபவா!
ஓம் சரவணபவா!

வள்ளலே உன்திருமந்திரம் இனித்திடும் செந்தேன்,
உள்ளத்திலேஅதனையோதிகாத்துக்கிடந்தேன் ;

காங்கேயா,கண்முன்வராமல் காக்கவைப்பதேன்?
ஏங்கும் ஏழை எந்தனுக்கு இறங்க மறுப்பதேன்?..நீ
ஏங்கும் ஏழை எந்தனுக்கு இறங்க மறுப்பதேன்?

 நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!

ஏரகத்தில் பிரணவத்துக்கு விளக்கினாய் பொருள் ,
ஆறுமுகா,அகற்றிடுவாய்,அகத்துப்பேரிருள்;
ஞானமற்ற ஈனன் எனக்குன் பாதமே புகல்  ;
தீனதயாளா,பொழிவாய் என்மேல் பேரருள்!..ஹே
தீனதயாளா,பொழிவாய் என்மேல் பேரருள்!

நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!

No comments:

Post a Comment