Tuesday, March 26, 2013

வள்ளித்திருமணம்


(நன்றி:google)
வள்ளித்திருமணம்

மால்மகளாய்த் தவமிருந்து
மான்மகளாய் மண்ணில் வந்து
குறமகளாய் வளர்ந்தவள்ளி
மணமகளானாள்!-இன்று சிவசக்தித் தம்பதியின்
மருமகளானாள் !

புனங்காத்த புனிதையவள்
அதரத்திலோ "ஆலோலம்"
இதயமெல்லாம் குகக்கோலம்
வரைந்து நின்றாள் !-இன்று காதல்பரிசாய்க் கந்தன்
கரந்தனை வென்றாள் !

ஆணழகன் ஆறுமுகனைக்
காணக் கண் துடிதுடிக்க
நாணம் நிலம் நோக்கி இழுக்க
நாணலானாள் !-நாதன் நாண்  முடிக்க நங்கை இதய
ராணியானாள் !




 

No comments:

Post a Comment