Sunday, March 10, 2013

ஜம்புகேஸ்வர ஸ்தோத்ரம்

 

ஜம்புகேஸ்வர ஸ்தோத்ரம் 
(SUBBUSIR  sings:
http://www.youtube.com/watch?v=IJLCeBQNCuY&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )

லலாட லோசன ஜ்வாலா  நிர்தக்த   ஸ்மர  விக்ரஹ |
நமஸ்தே கரிசர்மாத்த வாஸஸே க்ருத்தி வாஸஸே||

கரும்புவில்லேந்தும் காமனைக் கனல்விழியால் 
                எரித்தவா!யானையூரீசா!
சரணமையா !கரித்தோலினை ஆடையாய்த்  
                 தரித்தவா!க்ருத்திவாசா !

யஸ்சார்மணேன  பததஸ் சக்ஷூஷீ  நீலலோஹித | 
தத்தாம பவதோ நித்யம் சதா பஸ்ச்யந்தி ஸூரய:||

பாரோர் புறக்கண்ணால் பார்க்க இயலா உன் 
                பேரொளி வீசும் உருவை ,
பற்றறுத்தஞானியர் அகக்கண்களால் கண்டு 
               களித்திருப்பர் காலமெல்லாம்.

ஸ்ருஷ்ட்யர்த்தம் பிரம்ம ரூபஸ்ஸன் ஸ்தித்யர்த்தம் ஜகதாமபி|
தவைவ ஹரநித்யோயம் ஆத்மா நாராயண:பர:|| 

ஆக்குந்தொழில் புரிய வாகீசன் வடிவெடுத்த 
            அருட்பெருஞ்ஜோதிச் சுடரே!
ஆக்கிய அனைத்தையும் அரிவடிவிலே வந்து
             காத்தருளும் கருணைக் கடலே! 

அம்ருதேஸ்வர பூதேச ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரண|
யத்தவ  ஸ்தானமனகம் தத்விஷ்ணோ :பரமம் பதம் ||

அப்புலிங்கமாய் ஆனைக் காவில் அருள்பவனே!
             பூதகணங்களின் தலைவனே!
முத்தொழிலுக்கும் காரணனே!உன்தலம் 
             நாடிடுவான்  நாரணனே! 

பக்தாந்த:கருணாம்போஜ விகாஸன கரத்விஷே|
அம்ருதேச நமஸ்தேஸ்து ருத்ராய ஸ்திர தன்வனே||

இதயந்தனை ஈர்த்து அடியார் அகங்குளிர 
            அருளும் அம்ருதேச்வரா!
எதிரி நடுநடுங்க வில்லேந்தி காட்சிதரும் 
            ருத்திரனே!மகேஸ்வரா!

ஜடாமகுட நிஷ்யந்த கங்கா ரிங்கத் ஸுதாம்சவே|
நமோ அம்ருதஸ்வரூபாய லிங்காயாமல தேஜஸே||

பொங்கிவரும் கங்கையை தடுத்திட மதியினை 
            சிரந்தனில் தரித்த சிவனே!
ஜம்புலிங்கமாய்  ஜொலிக்கும் ஜோதியே!எளியனுக்கு 
           அரணுந்தன்  தூய பதமே!

அமராதிப கோடீர நிர்க்ருஷ்டாங்க்ரி ஸரோருஹ |
ஸ்வபக்த ஜனுஷே துப்யம் மஹஸே மஹதே நம:||

வணங்கும் வாசவனின் மகுடம் மெல்ல வருட
                       விளங்கும் மலர்ப்பாதனே! 
சரணம்,அன்பர்க்கு லிங்கமாய்  திருக்காட்சி  
                      அருளும் ஜம்புநாதனே!

தீவ்யத்ஸுராசஸுர வதூ சீமந்த மணி ரஷ்மிபி:|
நீராஜித பதாப்ஜாய  தேவாய மஹதே நம :|| 

உனைப் பணிந்திடும் தேவ அசுர அணங்குகள் 
                   அணியும் ரத்னமணி ஒளியிலே 
நனைந்து நீராடிடும் நின் மலர்ப்பதங்களை 
                    பணிகின்றேன் ,பரமேஸ்வரா !


            




           





 

No comments:

Post a Comment