Tuesday, December 11, 2012

உமை கவிதை செய்கின்றாள் !

           [Bharathi.jpg]
படத்துக்கு நன்றி: http://photobucket.com/images/women%20power/

உமை கவிதை செய்கின்றாள் !
(பாரதியாரின்  பிறந்தநாளான  இன்று (11-12-12)
பாஞ்சாலி சபதத்தில் "மாலை வருணனை "யில்  
ஒரு பகுதி கீழே:)

பாரடியோ!வானத்திற் புதுமையெல்லாம் .
        பண்மொழீ !கணந்தோறும் மாறி மாறி
ஓரடி மற்றோரடியோ டொத்தலின்றி
       உவகையுற நவநவமாத் தோன்றுங் காட்சி;
யாரடி இங்கிவைபோலப் புவியின் மீதே
      எண்ணரியப் பொருள் கொடுத்தும் இயற்றவல்லார் !
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
     செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக்காண்பாய் !

கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
      கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் ;
கணந்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும்
      கருதிடவும் சொல்லிடவும் எளியதோ?ஆங்கே ,
கணந்தோறும் ஒரு புதிய வண்ணங்காட்டி
      காளிபராசக்தி அவள் களிக்குங்கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
      கருதுவதன் விளக்கத்தை இங்குக்காண்பாய்.

அடிவானத்தே அங்கு பரிதிக்கோளம்
        அளப்பரிய விரைவினோடு சுழலக் காண்பாய் .
இடிவானத்தொளிமின்னல் பத்துக்கோடி
         எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து ,
முடிவானவட்டத்தைக்காளி ஆங்கே
       மொய்குழலாய்!சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவானதொன்றாகத் தகடிரண்டு
        வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.

அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே 
          அசைவுறுமோர் மின்செய்த வட்டு;முன்னே ,
சமையுமொரு பச்சைநிற வட்டங்காண்பாய்;
           தரணியிலிங்கிதுபோலோர்  பசுமைஉண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக்கால்கள் 
            எண்ணில்லாதிடையிடையே எழுதல் காண்பாய்.
உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே 
உரைத்திடுவோம்,"பல்லாண்டு வாழ்க!"என்றே.
         









 

No comments:

Post a Comment