Thursday, March 24, 2011

ஸாயி நாமாவளி 

    ஸாயி  நாமாவளி








(1) ஸாயியே கணேசனின் அவதாரம் ;
விக்னம் விலக்கிடும் அவர் நாமம்.

பக்திப்பெருகச்சொல்லு,ஸாயி கணேசா!
சத்தியமூர்த்தியே,ஸாயி கணேசா!
சோகவிநாசகா,ஸாயி கணேசா!
சீரடிவாசா,ஸாயி கணேசா!

(2)ஸாயியே சரஸ்வதியின் அவதாரம்;
மெய்ஞானம் தரும் அவர் நாமம்.

தேனொழுகச் சொல்லு,ஸாயி வீணாபாணி!
சகலகலாவல்லி,ஸாயி கலைவாணி!
வாகீச்வரியே,ஸாயி சரஸ்வதி!
சீரடிவாசினி,ஸாயி பாரதி!

(3 )ஸாயியே பிரம்மனின் அவதாரம்;
ஆக்கத்திறனளிக்கும் அவர் நாமம்.

படைப்பின்கடவுளே ஸாயி பிரம்மதேவா!
நான்முகக்கடவுளே,ஸாயி வாகீசா!
நான்மறைநேசா,ஸாயி வாணிநாதா!
சீரடிவாசா!ஸாயி வினோதா!

(4 )ஸாயியே அரியின் அவதாரம்;
நலம் யாவும் நல்கும் அவர் நாமம்.

மெய்மறந்தே சொல்லு,ஸாயி ரகுராமா!
ராதா ரமணா,ஸாயி கன்ஷ்யாமா!
ஆண்டளையாட்கொண்ட  ஸாயி ரங்கநாதா!
சீரடிவாசா,ஸாயி நவநீதா!

(5 )ஸாயியே அரனின் அவதாரம்;
முக்தியளித்திடும் அவர் நாமம்.

பரவசமாய்ச் சொல்லு,ஸாயி பரமேசா!
குமார ஜனகா,ஸாயி ஜகதீசா!
முக்கண் முதல்வா,ஸாயி மகேசா!
சீரடிவாசா,ஸாயி நடேசா!

(6 )ஸாயியே குகனின் அவதாரம்;
நோய்நொடி  நீக்கும்  அவர் நாமம்.

மனமுருகச் சொல்லு,ஸாயி முருகேசா!
சரவணபவ ஓம் ஸாயி குமரேசா!
சுரமகள் நேசா,சாயிவள்ளீசா
சீரடிவாசா,ஸாயி சர்வேசா!

(7 )ஸாயியே சத்குருவின் அவதாரம்;
நற்கதியளிக்கும் அவர் நாமம்.

அனுபவித்தே சொல்லு,ஸாயி குருநாதா!
அனுதினமும் சொல்லு,ஸாயி குருநாதா!
புனிதனின் பேர்சொல்லு,ஸாயி குருநாதா!
கண்கண்டகடவுளே ,சாயிகுருனாதா!
கலியுகவரதா,ஸாயி குருநாதா!
கலங்கரை விளக்கே!ஸாயி குருநாதா!
(ஸாயியே சத்குருவின்.....)




1 comment: